வீட்டு பக்கம் வரவே கூடாது.. அனிருத்தை விரட்டியடித்த ரஜினிகாந்த்…ஐஸ்வர்யா இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், ஏற்கனவே இரண்டாவது மகள் சௌதர்யா முதல் கணவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்ற போது தனது குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்த ரஜினிகாந்தை ஒரு வழியாக சமாதானம் செய்து வைத்த குடும்பத்தினர், இதன் பின்பு சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பின்பு குடும்பத்தில் இனி பிரச்சனை இல்லை என நிம்மதி பெரு மூச்சு விட்டார் ரஜினிகாந்த்.

மருமகன் தனுஷ் மீது அளவற்ற பாசம் ரஜினிகாந்த்க்கு எப்போதும் உண்டு, நடிகர் ரஜினிகாந்த் 2011ம் ஆண்டு உடல்நல குறைவினால் சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது கண்கலங்கி நின்ற ரஜினிகாந்த் குடும்பத்திற்கு ஆறுதலாக, மேலும் அந்த நேரத்தில் மாமனார் ரஜினிகாந்துக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பும் வரை துணையாக இருந்து வந்தவர் தனுஷ். அதில் இருந்தே தனுஷ் மீது மாமனார் ரஜினிகாந்த்க்கு தனி பாசம் உண்டு.

மகள் ஐஸ்வர்யா அவருடைய கணவர் தனுஷை விட்டு பிரிவதாக முடிவு செய்த போது அப்போதே ரஜினிகாந்த் மொத்த கோபமும் குடும்பத்தினர் பக்கம் திரும்பியது. இந்நிலையில் ஏற்கனவே ஐஸ்வர்யா உடன் அனிரூத் நெருக்கி பழகி வந்ததால், தனுஷ் மற்றும் அவரது மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து அனிருத் – தனுஷ் இடையே மோதல் போக்கை உருவாக்கியது இதன் பின்பு அனிரூத் – தனுஷ் இருவரும் நிரந்தரமாக பிரிந்தனர்.

அதே கால கட்டத்தில் நடிகர் சிம்பு உடன் இணைந்து பீப் சாங் பிரச்னையில் சிக்கினார் அனிரூத், இது ரஜினிகாந்த் உறவினர் அனிரூத் என மிக பெரிய தலைகுனிவை ரஜினிகாந்த்க்கு ஏற்படுத்தியது. ஏற்கனவே அனிருத்தால் மகள் ஐஸ்வர்யா – தனுஷ் இடையே பிரட்சனை, அதனை தொடர்ந்து பீப் சாங் பிரட்சனை என அனிருத் மீது கடும் கோபத்தில் இருந்த ரஜினிகாந்த், இனி அனிரூத் உடன் எந்த தொடர்பும் இருக்க கூடாது என குடும்ப உறுப்பினர்களுக்கு உத்தரவிட்ட ரஜினிகாந்த்.

மேலும் போயஸ் கார்டன் வீட்டு பக்கமே அனிரூத் வர கூடாது என ரஜினிகாந்த் தெரிவித்ததாக அப்போது கூறப்பட்டது. இதன் பின்பு சில வருடங்களில் அனிருத் மீதான ரஜினிகாந்த் கோபம் குறைய குடும்பத்தினர் மெல்ல அனிருத்தை மீண்டும் உள்ளே இழுத்து கொண்டனர், இதன் பின்பு ரஜினி நடிப்பில் வெளியான தர்பார், பேட்ட படங்களுக்கு அனிருத் இசையமைத்தார், இருந்தாலும் அனிரூத் மீது ரஜினிக்கு இருந்த கோபம் குறையாவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனராக படம் இயக்க உள்ளார், அந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்க இருக்கிறார். இதனை தொடர்ந்து அடிக்கடி ஐஸ்வர்யா மற்றும் அனிருத் இருவரும் ஒன்றாக சுற்றி வரும் தகவல் அறிந்து கடும் கோபத்தில் ரஜினிகாந்த் இருந்து வருவதால் மீண்டும் அனிரூத்தை விட்டு பக்கம் வர கூடாது என ரஜினிகாந்த் விரட்டியடிக்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது.

பயத்தில் பொட்டி பாம்பை அடங்கிய விஜய் … எதற்கு இந்த பயம்.. என்ன நடந்தது தெரியுமா.?