வில்லியாக மாறிய லதா ரஜினிகாந்த்… பாதியில் நிற்கும் தனுஷ் படங்கள்..! என்ன நடக்கிறது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பிரிவதாக அறிவித்த பின்பு இவர்களை மீண்டும் இணைத்து வைக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். தந்தை ரஜினிகாந்த் விருப்பத்துக்காக மீண்டும் இணைய வேண்டும் என முடிவு செய்து தனுஷ் காலில் விழாத குறையாக ஐஸ்வர்யா, இனி தனுஷ் சுதந்திரத்தில் தலையிட மாட்டேன் என என்னுடன் மீண்டும் இணைந்தால் போதும் என விருப்பம் தெரிவித்தார் ஐஸ்வர்யா.

ஆனால் பிடிவாதமாக தனுஷ் வேண்டாம் என மறுத்து விட்டார், லதா ரஜினிகாந்த் கூட பிரிந்த தம்பதியினரை மீண்டும் இணைந்து வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டார், ஆனால் தனுஷ் கண்டு கொள்ளவே இல்லை. இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் பிரிந்த தம்பதியினர் மீண்டும் இணைவதர்க்கு சாத்தியம் இல்லை என உறுதியான பின்பு, மருமகன் தனுஷ்க்கு எதிராக வில்லியாக மாறிய லதா ரஜினிகாந்த் தனது கணவரின் செல்வாக்கை பயன்படுத்தி தனுஷுக்கு எதிரான ஆட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில் தமிழ் மற்றுமின்றி பல்வேறு மொழி படங்களில் தனுஷ் எதிராக கடும் நெருக்கடியை கொடுக்க தொடங்கியுள்ளார் லதா ரஜினிகாந்த் என கூறப்படும் நிலையில் தனுஷ் நடிக்கும் புதிய படங்களுக்கு பெரும் சிக்கல் வரும் என கூறப்படுகிறது, அதே நேரத்தில் தனுஷ் தற்போது நடித்தும் வரும் படங்களும் சிக்கலை சந்திக்க தொடங்கியுள்ளது. தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் டயலாக் ரைட்டர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பாடலாசிரியர் விவேக் “கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக நான் மாறன் படத்தின் உரையாடல் மற்றும் திரைக்கதை எழுத்தாளரில் இருந்து விலகுகிறேன். எனது முடிவை மதித்த குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார், இதே போன்று தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த போது தான் ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதியினர் பிரிவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த தினேஷ் கிருஷ்ணன் திடீரென இப்படத்திலிருந்து விளக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் இருந்து கதையாசிரியர் மற்றும் வாத்தி படத்தின் ஒளிப்பதிவாளர் என அடுத்தடுத்து விலகியுள்ளது, தனுஷ் படங்கள் பாதியிலே தடைபட்டு தத்தளித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பின்னணியில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இருப்பதாக கூறப்படும் நிலையில்.

இன்னும் என்ன நெருக்கடியை தனுஷ் சந்திக்க போகிறார் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் தனுஷ் நடிக்கும் படங்களில் நடக்கும் இது போன்ற நெருக்கடி சம்பவங்களால் அடுத்து இனி தனுஷை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் நிச்சயம் தயக்கம் காட்டுவார்கள் என்றும், இதனால் தனுஷ் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது குறிப்பிடதக்கது.

நடிகர் விஜயை நேருக்கு நேராக அசிங்கப்படுத்திய இயக்குனர் மிஸ்கின்..! அவமானத்தில் தலைகுனிந்த விஜய்…