தனுஷை வசமா சிக்க வைத்த ரஜினி.. மருமகன் என்கிற ஒரு இரக்கம் கூட இல்லாமல் இப்படியா.? பாவம் தனுஷ்..

0
Follow on Google News

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி காதல் கொண்டேன் படத்தில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று அடுத்து தனது மூன்றாவது படமான திருடா திருடி படத்தை ஏலம் விட்டு விற்பனை செய்யும் அளவுக்கு மூன்றே படத்தில் மிக பெரிய உச்சத்தை தொட்டார் தனுஷ். இதன் பின்பு ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த தனுஷ். சினிமா துறையில் ரஜினிகாந்த் மருமகன் என்பதால் மேலும் தனுஷ் செல்வாக்கு அதிகரித்தது.

தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை கொடுத்தாலும், அடுத்து ஒரு மிக பெரிய ஹிட் படம் கொடுத்து தன்னை நிலை நிறுத்தி கொள்வார் தனுஷ். இப்படி நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யாவை இயக்குனராக அறிமுகம் செய்வதற்காக புதியதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார், முதல் தயாரிப்பு மனைவி இயக்கத்தில் நஷ்டத்தை சந்தித்தது, அடுத்தடுத்து தனுஷ் தயாரிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்தது.

ஒரு சில படங்களை தவிர்த்து பல படங்கள் மிக பெரிய நஷ்டத்தை கொடுத்து நடிகர் தனுஷை கடனாளியானார். இனி புதியதாக படம் எடுக்க வேண்டுமானால் கடன் வாங்கி தான் படம் எடுக்க வேண்டும் என்கிற சூழலில் இருந்த நடிகர் தனுஷ் படும் சிரமத்தை மகள் ஐஸ்வர்யா மூலம் அறிந்து கொண்டார் ரஜினிகாந்த். அப்போது கபாலி படம் வெளியாகி ஓரளவு அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணுவுக்கு லாபத்தை பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து கபாலி படத்தில் 80 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி, அடுத்து காலா படத்தில் மருமகன் கடனில் இருப்பதால் 40 கோடி மட்டும் சம்பளம் கொடுத்தால் போதும் என பேசி கால் சீட் கொடுத்துள்ளார். ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படம் எதிர்மறை மற்றும் நேர்மறை என சமமான விமர்சனங்களை பெற்றது. அப்படி இருக்கையில் எதற்கு மீண்டும் பா .ரஞ்சித்துக்கு ரஜினி வாய்ப்பு கொடுத்தார் என விமர்சனம் எழுந்தது.

இதனை தொடர்ந்து காலா படம் வெளியாகி எதிர்ப்பார்த்த வசூலை பெறவில்லை, ஓரளவு இந்த படம் லாபத்தை பெற்று தந்தாலும், ஏற்கனவே ரஜினி நடித்த பாபா, லிங்கா படத்தின் நஷ்ட தொகை கேட்டு ரஜினி வீட்டின் முன்பு விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தியது போன்று ஒரு சூழல் நடந்துவிட கூடாது என்பதற்காக விநியோகஸ்தர்களை சரி செய்துள்ளார் தனுஷ் இதனால் அவருக்கு சுமார் 25 கோடி நஷ்டம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கடனில் இருக்கும் மருமகன் தனுஷ் மேலும் காலா படத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக கடும் சிக்கலில் சிக்கியுள்ளதை அறிந்து ரஜினிகாந்த் கண்டு கொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மிக சிறிய தொகை மட்டுமே காலா படத்தில் தனுசுக்கு கிடைத்தது என்றும் அதில் ஓரளவு மட்டுமே கடனை அடைத்த தனுஷ், அதன் பின்பு தன்னுடைய சொந்த முயற்சியில் மீதி கடனை அடைந்துள்ளார் தனுஷ்.

இந்நிலையில் காலா படத்தில் சம்பளமே பெறாமல் ரஜினி நடித்திருந்தால், அல்லது விநியோகஸ்தர்கள் அடைந்த 25 கோடி நஷ்டத்தை ரஜினி ஏற்று கொண்டிருத்தால் கூட தனுஷ்க்கு ஓரளவு உதவியாக இருந்துருக்கும், ஆனால் மருமகன் என்று கூட பார்க்காமல், காலா பட விவகாரத்தில் இறங்கமின்றி நடந்துகொண்டார் ரஜினிகாந்த் என கூறப்படுவது கூறிப்பிடத்தக்கது.

நீயெல்லாம் சோறு தான் சாப்புடுறீயா.? சிம்புவை வெளுத்து வாங்கிய ஹரி…எதற்கு தெரியுமா.?