ரஜினி மகள்கள் இடையே குடுமிப்பிடி சண்டை… தலையை பிய்த்து கொண்ட ரஜினி..! இறுதியில் நடந்தது என்ன.?

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியாவில் விரல் விட்டு என்ன கூடிய முக்கிய பிரபலங்களின் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். பணம், புகழ் என உச்சத்தில் இருந்து வரும் ரஜினிகாந்த் குடும்ப வாழ்க்கையில் மட்டும் நிம்மதியின்றி தவித்து வருகிறார் என்றே சொல்லலாம். கடந்த காலங்களில் நிம்மதியை தேடி அடிக்கடி இமயமலை சென்று வந்த ரஜினிகாந்த். தற்பொழுது வயதான காலத்தில் நிம்மதியை தேடி எங்கே செல்வது என தெரியால் நிம்மதியின்றி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் திருமணம் முடிந்த சில வருடங்களில் குடும்ப வாழ்க்கையை வெறுக்க தொடங்கியவர், மன நிம்மதிக்காக ஆன்மீகத்தில் மூழ்கினர், ஆன்மீக தேடல் காரணமாக அடிக்கடி இமயமலை சென்று அங்கே ரிஷிகளுடன் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுவது, ரிஷிகள் வாழ்ந்த குகைகளுக்கு சென்று வழிபடுவது என ஆன்மீகத்தில் ஒரு ஞானி என்று சொல்லும் அளவுக்கு அவரை ஒரு நடிகர் என்று மட்டும் பார்க்காமல் பலர் ஆன்மீகவாதி என்றும் அவரை அழைப்பார்கள்.

இந்நிலையில் தன்னுடைய இரண்டு மகள்களின் நடவடிக்கையினால் தொடர்ந்து மன நிம்மதியின்றி ரஜினிகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது மகள் முதல் கணவரை விட்டு பிரிந்து இரண்டாவது ஒருவரை திருமணம் செய்து கொண்டார். முதல் மகள் ஐஸ்வர்யா இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கணவரை விட்டு பிரிந்துள்ளார். இப்படி மகள்களின் நடவடிக்கைகளால் ரஜினிகாந்த் மன உளைச்சலில் இருந்து வரும் நிலையில், இரண்டு மகள்களுக்குள் சமீபத்தில் நடந்த குடுமிப்பிடி சண்டை மேலும் ரஜினியை வருத்தமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டன் வீடு இரண்டு மகள்களில் யாருக்கு என கடந்த வருடம் நடந்த சண்டையில் இரண்டாவது மகள் சௌதர்யாவுக்கு தற்பொழுது ரஜினி வசிக்கும் வீடு என்றும், மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு போயஸ் கார்டனில் புதியதாக ஒரு வீடு கட்டி தரப்படும் என முடிவு செய்து புதிய வீடு கட்டும் பனி தொடங்கியது, அதே போன்று ரஜினி படத்தில் நடிக்கும் சம்பளம் தொகையை பிரிப்பதில் இரண்டு மகள்களுக்குள் லிங்கா படத்தின் போது சண்டை ஏற்பட்டது.

அப்போது ஒரு படம் சம்பளம் முதல் மகள் ஐஸ்வர்யாவுக்கு, அடுத்த பட சம்பளம் இரண்டாவது மகள் சௌதர்யாவுக்கு என அவர்களுக்குள் பேசி முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது ரஜினிகாந்த் சம்பளம் ஒவ்வொரு படத்துக்கும் அவருடைய மார்க்கெட் பொறுத்து ஒரு படத்துக்கு அதிகமாகவும், மற்றொரு படத்துக்கு குறைவாகவும் இருக்கும், இதனால் சம அளவில் இரண்டு மகள்களுக்கும் ரஜினியின் சம்பள தொகை கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

இதனால் அண்ணாத்தே படத்தை முடித்த பின்பு புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் இரண்டு மகள்களுக்கும் மீண்டும் அப்பா ரஜினி சம்பளத்தை பங்கு போடுவதில் குடுமிப்பிடி சண்டை நடந்துள்ளதாகவும், அப்போது இனிமேல் ஒவ்வொரு படத்தின் போது அப்பா ரஜினிகாந்த் வாங்கும் சம்பளத்தை சரி பாதியாக பங்கு போட்டு கொள்வது என குடும்பத்துக்குள் பேசி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஜினியின் இரண்டு மகள்களும் வெளியில் ஒற்றுமையாக இருப்பது போன்று காட்டி கொண்டாலும், பண விஷயத்தில் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மனப்பாண்மை இருவருக்கும் கிடையாது என கூறப்படுவது, மேலும் குடும்ப உறுப்பினர்களின் இது போன்ற செயல்களால் மன நிம்மதியின்றி ரஜினிகாந்த் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்படத்தக்கது.

அடுத்தவர் கணவரை ஆட்டைய போட்ட பாலா மனைவி முத்துமலரின் தாயார்..! அட கடவுளே… என்ன நடந்தது தெரியுமா.?