நன்றி மறந்த ரஜினிகாந்த்… நடுதெருவில் நிற்கும் கே.எஸ்.ரவிக்குமார்..! அஜித்தை பார்த்து கற்று கொள்வாரா ரஜினி.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் நடிகர் அளவுக்கு இயக்குனர் ஒருவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தார்கள் என்றால், அது இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தான். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கிய பின்பு அவருக்கென உலகம் முழவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் ரசிகர்கள் இருந்து வந்தனர். ஆரம்ப கட்டத்தில், தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படங்களை இயக்கி வந்தவர் கே எஸ் ரவிக்குமார்.

நடிகர் சரத்குமார், ஆனந்த்பாபு, சரவணன் போன்ற சிறிய நடிகர்களை ஹீரோவாக வைத்து படம் இயங்கிவந்த கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது, இந்த படத்துக்கு பின்பு தான் அதில் ஹீரோவாக நடித்த சரத்குமார் முன்னனி நடிகராக வலம் வந்தார். நாட்டாமை படத்தை பார்த்த ரஜினிகாந்த் நேரில் கே எஸ் ரவிக்குமாரை அழைத்து நம்ம ஒரு படம் பண்ணுவோம் கதை ரெடி பண்ணுங்க என்றார்.

அந்த காலத்தில் ரஜினி – ஜெயலலிதா இடையே உச்சகட்ட மோதல் நடந்து கொண்டிருந்த, மேலும் பாட்ஷா படம் வெளியாகி ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என பரபரப்பாக இருந்த காலம். அந்த சூழலுக்கு ஏற்ப அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் ரஜினிகாந்த் நடிப்பில் மாஸ் படமாக வெளியானது தான் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வந்த முத்து.இதனை தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்த் – கே.எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வெளியான படம் படையப்பா.

இந்த படம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய படம் என்கிற சாதனையை படைத்தது. இதன் பின்பு சுமார் 15 வருடங்களுக்கு பின்பு மீண்டும் இணைந்த இந்த கூட்டணியில் வெளியான லிங்கா படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. படத்தின் கதை, திரைக்கதை என அனைத்தும் பாராட்டும்படி இருந்தாலும், ஒரு சில காட்சிகள் ரஜினிகாந்துக்கு செட் ஆகவில்லை.

லிங்கா படத்துக்கும் பின்பு சுமார் கடந்த எட்டு வருடமாக தமிழில் எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்து வரும் கே.எஸ்.ரவிக்குமார், மீண்டும் ரஜினியை வைத்து படம் இயக்க காத்திருக்கிறார். தொடர்ந்து ரஜினியை சந்தித்து கதை சொல்லி வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும் கடந்த எட்டு வருடமாக கே எஸ் ரவிக்குமாரை காக்க வைத்து ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்தே படத்திற்க்கு பின்பு அடுத்த படத்திற்கு கே.எஸ்.ரவிகுமரிடமும் கதை கேட்டுள்ளார் ரஜினி.

இந்த முறை எப்படியும் மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைத்து விடலாம் என்கிற எதிர்பார்ப்பில் இருந்து வந்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார், மேலும் ரஜினி குடும்ப உறுப்பினர்களிடம் தனது கதையை ரஜினியை ஓகே சொல்லி கே.எஸ் ரவிக்குமார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்த புதிய படத்துக்கு நெல்சனை ஓகே சொல்லி வழக்கம் போல் கே.எஸ்.ரவிக்குமாரை ஏமாற்றி விட்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் கடந்த எட்டு வருடமாக தமிழில் எந்த ஒரு படமும் இயக்காமல் ரஜினியை நம்பி சினிமா வாழ்க்கையை இழந்து நடு ரோட்டில் ரஜினியின் வாய்ப்புக்கு நிற்கிறார் கே.எஸ் ரவிக்குமார் என கூறப்படுகிறது.

இந்த விஷயத்தில் அஜித்தை பார்த்து கற்று கொள்ள வேண்டும் ரஜினி, விவேகம் படம் தோல்வியை தழுவியதும் மீண்டும் சிறுத்தை சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்து விஸ்வாசம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் மறுவாழ்வு தந்தார், அதே போன்று H.வினோத் இயக்கத்தில் வலிமை தோல்வி அடைந்தாலும் அவர் மேல் உள்ள நம்பிக்கையில் மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார் அஜித். ஆனால் ரஜினிகாந்த் மட்டுமில்லை அவர்கள் குடும்பத்தில் யாருக்குமே கே.எஸ் ரவிக்குமார் மீது நன்றி உணர்வு இல்லையா.? என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா போன்று பா.ரஞ்சித்தை புறக்கணித்த ஏ.ஆர்.ரகுமான்….காரணம் இது தான்.!