இரண்டு மகன்களையும் ஆசை காட்டி மோசம் செய்த ஐஸ்வர்யா.. இப்படி ஒரு அம்மாவா.? என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்து தனி தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் யாத்ரா , லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிந்த பின்பு சினிமாவில் ரெம்ப பிசியாக வேலை செய்து வந்தனர், இடையில் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவு செய்தார்.

மனைவியை விட்டு பிரிந்த குறுகிய காலத்தில் ஒரு முறை ஊட்டியிலும், அடுத்த சில தினங்களில் இளையராஜா இசை நிகழ்ச்சியில் தனது மகன்களுடன் தனுஷ் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதற்கு முன்பு கூட இரண்டு மகன்களும் அப்பா தனுஷ் மீது தான் அதிக பாசமாக இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியானது.

ஐஸ்வர்யா பெரும்பாலும் குடும்பத்தின் மீது அக்கறை கொள்ளமாட்டார் என்றும், அடிக்கடி தோழிகளுடன் வெளிநாடு சென்று ஷாப்பிங் செய்வது, பரதநாட்டியம், யோக, உடற்பயிற்சி செய்வது இப்படி ஏதாவது சுதந்திரமாக செய்து கொண்டிருப்பார் ஐஸ்வர்யா என்றும், தந்தை தனுஷ் மட்டும் தான் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இரண்டு மகன்களுடன் அதிக நேரம் செலவு செய்வது, அடிக்கடி மகன்களுடன் வெளிநாடு செய்வது என மகன்கள் மீது அதிக பாசத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சியில் இரண்டு மகன்களுடன் தனுஷ் கலந்து கொண்டது, இரண்டு குழந்தைகளும் தந்தை தனுஷ் மீது தான் அதிக பாசத்துடன் இருப்பதாகவும் தாய் ஐஸ்வர்யா குழந்தைகளை கண்டு கொள்வதில்லை என்கிற விமர்சனம் கடுமையாக எழுந்தது. இதனை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் இரண்டு மகன்கள் தனக்கு முத்தம் கொடுப்பது போன்று புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார் ஐஸ்வர்யா.

இந்த சம்பவம் நடந்து அடுத்து சுமார் இரண்டு வாரங்கள் கழித்து நேற்று இரண்டு மகன்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இரண்டு மகன்களும் தன்னிடம் அதிக பாசத்துடன் இருப்பதாக வெளியில் காட்டி கொள்வதற்காக, அதாவது ஐஸ்வர்யா சுய விளம்பரத்துக்காக தான் இப்படி மகன்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா வெளியிட்டு வருவதாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து விசாரித்ததில்.

எப்போதும் போல குடும்பத்தின் மீது அக்கறையில்லாமல் தான் ஐஸ்வர்யா இப்போதும் இருந்து வருவதாகவும், தற்பொழுது சினிமாவில் மீண்டும் படம் இயக்க உள்ள ஐஸ்வர்யா ரெம்ப பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது இரண்டு மகன்களும் தன் மீது ரெம்ப பாசமாக இருப்பதாக வெளியில் காட்டி கொள்வதற்காக மட்டுமே மகன்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொள்ளும் ஐஸ்வர்யா, அந்த புகைப்படம் எடுக்கும் நேரம் தான் அவர் மகன்களிடம் செலவிடும் நேரம் என்றும்.

மேலும் மற்ற நாட்களில் இயக்குனர் ராஜமௌலி போன்று தன்னை ஒரு பெரிய இயக்குனர் என நினைத்து கொண்டு சினிமாவில் பிசியாகி விடுகிறார். ஐஸ்வர்யாவின் இந்த செயல், குழந்தைகள் மீது அதிக பாசம் இருப்பது போன்று குழந்தைகளிடம் நெருக்கி புகைப்படம் எடுத்து கொண்ட பின் தாய் பாசத்துக்கு ஏங்கும் அந்த குழந்தைகளை அடுத்த புகைப்படம் எடுக்கும் வரை ஐஸ்வர்யா கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இது அந்த குழந்தைகளை ஆசை காட்டி மோசம் செய்வதர்க்கு சமம் என்று சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரஜினி மகள்கள் இடையே குடுமிப்பிடி சண்டை…  தலையை பிய்த்து கொண்ட ரஜினி..! இறுதியில் நடந்தது என்ன.?