ஐஸ்வர்யா வாழ்க்கையில் புதிய திருப்பம்…கல்தா கொடுத்த சிம்பு… வேறு ஒருவரை பிடித்த ஐஸ்வர்யா..!

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிந்த பின்பு அவரவர் தனி தனியாக சினிமாவில் தங்களின் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளனர். இதில் இவர்கள் பிரிவுக்கு பின்பு சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்து வரும் நடிகர் தனுஷ் பல தரப்பில் இருந்து கடும் நெருக்கடியையும் சந்தித்து வருகிறார். இதனால் இனி சினிமாவில் தனுஷ் தாக்கு பிடிப்பதே கடினம் என கூறப்படுகிறது.

அதே போன்று ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். கணவர் தனுஷை விட்டு பிரிந்த பின்பு அவரை வெறுப்படைய செய்வதற்காக, தனுஷ் போட்டியாக இருக்கும் நடிகர் சிம்புவை வைத்து படம் இயக்க முடிவு செய்த ஐஸ்வர்யா அதற்கான கதையும் தயார் செய்து சிம்புவிடம் தெரிவித்துள்ளார். கதை மிகவும் பிடித்து போக நடிகர் சிம்புவும் ஓகே செல்லியுள்ளார். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால் திடீரென நடிகர் சிம்பு, நான் ரெம்ப பிசி, என்னால் கால் சீட் கொடுக்க முடியாது, சாரி… அடுத்து நேரம் அமைத்தால் இணைந்து படம் பண்ணுவோம் என ஐஸ்வர்யாவை நம்ப வைத்து கடைசி நேரத்தில் கல்தா கொடுத்து எஸ்கேப் ஆகியுள்ளார் சிம்பு. இதனை தொடர்ந்து சிம்புவுக்காக தயார் செய்த கதையை ஒரு ஓரமாக வைத்து விட்டு, புதிய கதை ஒன்றை தயார் செய்து அந்த படத்துக்கான வேலைகளில் மிக தீவிரமாக இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா.

இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் ராகவ லாரன்ஸ் நடிக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ராகவ லாரன்ஸை நேரில் சந்தித்து புதிய படத்துக்கான கதையை சொல்லி இருக்கிறார் ஐஸ்வர்யா, கதை மிகவும் பிடித்து போக, உடனே ஓகே சொல்லியுள்ளார் ராகவ லாரன்ஸ். இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் ஐஸ்வர்யா வெளியிடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

மேலும் ஒரு பக்கம் சினிமாவில் மிக பெரிய சரிவை தனுஷ் சந்தித்து வரும் நிலையில், மறுபக்கம் ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளது சினிமா வட்டாரத்தில் அவருக்கு மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய படம் வெளியே வந்த பின்பு அவருடைய சினிமா வாழ்க்கையில் மிக பெரிய மாற்றம் ஏற்பட்டு சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பாராத மரண அடி வாங்கிய சூர்யா……. சத்யராஜ் பாணியில் மன்னிப்பு கேட்கிறார் சூர்யா..