சௌந்தர்யா – விசாகன் இடையே புகுந்து சடுகுடு விளையாடும் ஐஸ்வர்யா..! குடும்பத்தில் வெடித்தது பிரச்சனை..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை உச்சக்கட்டத்தை அடைந்ததை தொடர்ந்து இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து, பிரிவதாக அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் நாகரிகமான முறையில் பிரிவதாக அறிவித்தாலும் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட அநாகரிகமான சண்டைகள் ஏதும் பெரும்பாலும் வெளியே வரவில்லை.

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு பின்பு இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா சமீபத்தில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டார், இந்த ஆல்பத்தில் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார், அதே போன்று பிறமொழியில் அந்தந்த மொழியை சேர்ந்த முக்கிய சினிமா பிரபலங்கள் வெளியிட்டனர், ஆனால் அந்த இசை ஆல்பத்தை வெளியிட்டவர்கள் கூட அதை கேட்டார்களா.? என்பது போல் அந்த இசை ஆல்பம் வந்ததும் தெரியவில்லை… போனதும் தெரியவில்லை.

தற்பொழுது மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா, தமிழில் நடிகர் ராகவ லாரன்ஸை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார், அதனை தொடர்ந்து இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளார். தனது புதிய படத்திற்கான திரைக்கதை எழுதுவதில் பிசியாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா. இந்நிலையில் ரஜினிகாந்த் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் கணவர் அஸ்வின் ஏற்கனவே சினிமாவில் நடித்திருந்தார், அவருக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற அசையும் உண்டு.

ஆனால் கணவர் சினிமாவில் ஹீரோவாக நடித்தால், அக்கா கணவர் தனுஷ் போன்று சக நடிகைகளுடன் லூட்டி அடிக்க தொடங்கி விடுவார் என்பதற்காக சௌந்தர்யா அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இருந்தும் எப்படியாவது சினிமாவில் நடித்து பிரபலமாகி விட வேண்டும் என்கிற ஆசையில் தொடர்ந்து மனைவியின் அனுமதிக்காக காத்திருக்கிறார் விசாகன். இந்த சூழலில் விசாகன் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஐஸ்வர்யா இறங்கியுள்ளார்.

தற்பொழுது ராகவலாரன்ஸை வைத்து இயக்கும் புதிய படத்திற்கு பின்பு தனது தங்கை கணவர் விசாகனை வைத்து ஒரு படம் இயக்கலாம் என அவரிடம் கதை ஒன்றை தெரிவித்துள்ளார். இதற்க்கு விசாகன் மகிழ்ச்சியில் ஐஸ்வர்யாவுக்கு நன்றியை தெரிவித்து, நான் ஹீரோவாக நடிக்க போகிறேன் என செம்ம குஷியில் இருந்து வருகிறார் விசாகன், ஆனால் அவரது மனைவி சௌந்தர்யா அதெல்லாம் கூடாது என கண்டிஷன் போட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் விசாகன் படத்தில் நடிப்பதில் உறுதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருவதாக கூறபடுகிறது. இந்நிலையில் சௌந்தர்யா – விசாகன் இருவருக்கும் இடையில் எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் சுமுகமாக சென்ற அவர்களின் குடும்ப வாழ்க்கையில் இடையில் புகுந்து விசாகனுக்கு சினிமா ஆசையை தூண்டிவிட்டு தங்கையின் குடும்பத்தில் சடுகுடு விளையாடி வருகிறார் ஐஸ்வர்யா என கூறப்படுகிறது.

ஆசை காட்டி மோசம் செய்த வெற்றிமாறன்… பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் சூரி..! என்ன நடந்தது தெரியுமா.?