போதைக்கு அடிமையான ஐஸ்வர்யா…குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு..கண்டுகொள்ளாத தனுஷ்..!

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் நட்சத்திர தம்பதியினர் தங்களின் கடந்த சுமார் 18 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக அறிவித்தவர்கள். மேலும் இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரையும் புரிந்து கொண்டு, இதில் இருந்து இருவரும் மீண்டு வருவதற்கான அவகாசத்தை அனைவரும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என இருவரும் ஜனவரி 17 நள்ளிரவில் அதிரடியாக அறிவித்தனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்த பின்பு இருவரையும் பற்றி இதுவரை ரகசியமாக பாதுகாப்பாக வைத்திருந்த பல விஷயம் வெளியே வர தொடங்கியுள்ளது. அந்த வகையில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவுக்கு மது அருந்தும் பழக்கம் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே இருந்ததாக கூறப்படுகிறது, ஆனால் அப்போதெல்லாம் என்றோ ஒருநாள் சக தோழிகளிடம் மது அருந்தி சந்தோசமாக இருந்து வந்துள்ளார்.

திருமணத்துக்கு பின்பு கூட அவ்வப்போது மது அருந்தும் ஐஸ்வர்யா, வெளிநாடுகளில் இருக்கும் தனது தோழிகளிடம் மது விருந்தில் கலந்து கொள்வதற்காகவே வெளிநாடு செல்வதாக கூறபடுகிறது. இப்படி என்றோ ஒரு நாள் மது அருந்தும் பழக்கம் கொண்டவராக இருந்து வந்த ஐஸ்வர்யா, கணவன் தனுஷ் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்குவது, இரவு பார்ட்டியில் நடிகைகளுடன் குடியும் கும்மாளமாக கணவர் தனுஷ் நடந்து கொள்வது,

போன்ற தகவல்களை அறிந்த ஐஸ்வர்யா அடிக்கடி தனுஷ் உடன் சண்டையிட்டு வந்துள்ளார், தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடு காரணமாக, மேலும் தனுஷ் பெண்கள் விஷயத்தில் திருத்துவதாக இல்லை, இதனை தொடர்ந்து தனுஷ் மீது ஏற்பட்ட கோபத்தில் மது அருந்தும் பழக்கத்தை அதிகரிக்க தொடங்கிய ஐஸ்வர்யா, முன்பு பார்ட்டிகளில் மட்டும் மது அருந்தி வந்தவர், வீட்டிலே தோழிகளை அழைத்து மது அருந்தும் நிலைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் மதுவுக்கு முழுவதும் தன்னை அடிமையாக்கி கொண்டுள்ளார் ஐஸ்வர்யா, ஆனால் ஐஸ்வர்யா இப்படி இருந்தால் தான் தன்னை கண்டுகொள்ள மாட்ட என ஐஸ்வர்யாவின் போக்குக்கே விட்டுள்ளார் தனுஷ். மதுவுக்கு அடிமையான ஐஸ்வர்யாவை மீட்கும் முயற்சியில் இறங்கிய அவரின் குடும்ப உறுப்பினர்கள், யோகா பயிற்சி மூலம் ஐஸ்வர்யாவை மது பழக்கத்தில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி இருந்து ஐஸ்வர்யா மெல்ல மீண்டு வந்த பின்பு, மீண்டும் தனுஷ் -ஐஸ்வர்யா இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், சமீபத்தில் தான் ஐஸ்வர்யா மதுவுக்கு அடிமையில் இருந்து மீண்டு வந்து தற்போது எப்போதாவது மது அருந்தி வருகிறார். மீண்டும் மதுவுக்கு ஐஸ்வர்யா அடிமையாகி விடாமல் இருக்க தயார் லதா மற்றும் சகோதரி சௌந்தர்யா இருவரும் ஐஸ்வர்யாவை தீவிரமாக கண்காணித்து அரவணைத்து சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது…. நீ யாருடனும் கும்மாளம் போடு…