ரஜினி தான் என்னை ஏமாற்றினார்… ரஜினி குடும்பத்தை கிழித்து தொங்க விட்ட தனுஷ்..! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினர் பிரிவதாக அறிவிப்பதற்கு முதல் நாள் வரை ஆந்திராவில் உள்ள ஒரே ஓட்டலில் ஒரே அறையில் தங்கி, ஆந்திராவில் நடிகர் தனுஷ் வாத்தி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஐஸ்வர்யா இசை ஆல்பம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இப்படி ஒரே ஓட்டலில் ஒரே அறையில் தங்கி அவரவர் சினிமா வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு தனுஷ் கோபத்தில் கடுமையாக பேசியுள்ளார் தனுஷ் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனுஷ் உடன் ஒரே அறையில் தங்கியிருந்த ஐஸ்வர்யா அந்த அறையில் இருந்து வெளியேறி அதே ஓட்டலில் தனி தனி அறையில் இருந்து கொண்டு ஜனவரி 17ம் தேதி நள்ளிரவில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இந்த தம்பதியினர் பிரிவதாக முதலில் முடிவு செய்தது ஐஸ்வர்யா தான் என்று கூறப்படுகிறது. ஆனால் குழந்தைகள் நலன் கருதி மீண்டும் இவர்கள் இணைய வேண்டும் என்கிற அப்பா ரஜினிகாந்த் விருப்பத்துக்காக மீண்டும் தனுஷ் உடன் இணைந்து வாழ விரும்பினார் ஐஸ்வர்யா, ஆனால் தனுஷ் மீண்டும் இணைந்து வாழ முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதன் பின்பு ஐஸ்வர்யா மற்றும் அவரது அம்மா லதா ரஜினிகாந்த் இருவரும் பல்வேறு நெருக்கடிகளை தனுஷ்க்கு கொடுத்தனர்.

அந்த வகையில் சொந்தமாக படம் தயாரித்து தனுஷ் கடனில் தத்தளித்த போது, அவருக்கு உதவும் வகையில் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் காலா படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிக்க சுமார் 40 கோடி சம்பளம் வாங்கினார் ரஜினிகாந்த். ஆனால் அன்றைய ரஜினிகாந்த் மார்க்கெட் சம்பளம் 80 கோடி வரை இருந்தது. இருந்தும் காலா படம் எதிர்பார்த்த லாபத்தை தரவில்லை. மேலும் விநியோகஸ்தர் தரப்பில் சுமார் 25கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு அதை தனுஷ் தான் சரி செய்தார்.

ஆனால் விநியோகஸ்தர் நஷ்டத்தை சரி செய்ய கூட ரஜினிகாந்த் உதவி செய்யவில்லை. இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு பின்பு இருவரையும் இணைத்து வைக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ரஜினிகாந்த் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள், உங்கள் கடனை அடைக்க காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து கொடுத்ததை நினைத்து, நன்றி உணர்வுடன் செயல்படுங்கள் என தெரிவிக்க, இதை கேட்டு டென்ஷன் ஆன தனுஷ்.

யார்.. யாருக்கு உதவி செய்தது, பாபா, லிங்கா போன்ற படத்தின் போது விநியோகஸ்தர்கள் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியது போன்று காலா படத்தில் ஏற்பட்டு அது ரஜினிகாந்துக்கு அவமரியாதையை ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக காலா படத்தில் விநியோகஸ்தர் அடைந்த நஷ்டத்தை சரி செய்ய 25 கோடி படத்தில் கிடைத்த வசூலில் இருந்து கொடுத்து சரி செய்தேன். மேலும் ரஜினிகாந்த் இந்த படத்தில் ஓசியில் நடித்து கொடுக்கவில்லை.

குறைந்த சம்பளத்தில் நடித்தாலும், படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தொகையை கணக்கிட்டால். அவர் தான் எனக்கு தரவேண்டியதாக இருக்கும். ஐஸ்வர்யாவை இயக்கத்தில் 3 படம், சௌந்தர்யா இயக்கத்தில் VIP 2 என ரஜினிகாந்த் மகள்கள் இயக்கத்தில் வெளியான படங்களை தயாரித்து தான் நான் கடனாளியானேன். என்னை ஏமாற்றிவிட்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் என தனுஷ் கோபத்தில் ரஜினிகாந்த் குடும்பத்தை கிழித்து தொங்கவிட்டதாக கூறப்படுகிறது.

நள்ளிரவில் நடிகையின் டார்ச்சர் தாங்க முடியமால் அஜித் எடுத்த அதிரடி முடிவு..! என்ன செய்தார் அஜித் தெரியுமா.?