என் மகள்களால் கடன்காரனாக நடு தெருவில் நிற்க்க போகிறேன்… வேதனையில் ரஜினிகாந்த்..! ஏன் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தில் ஏற்பட்டு வரும் தொடர் பிரச்சனை காரணமாக, நிம்மதியின்றி தவித்து வருகிறார் ரஜினிகாந்த். காதலித்து லதாவை திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்த், முழு குடும்ப பொறுப்பையும் மனைவி லதாவிடம் ஒப்படைத்துவிட்டு, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். பெரும்பாலும் மனைவி லதா பொறுப்புடன் குடும்பத்தை பார்த்து கொள்கிறார் என்கிற நம்பிக்கையில், குடும்ப விவகாரங்களில் கண்டுகொள்வதில்லை ரஜினிகாந்த்.

இந்நிலையில் இரண்டு மகள்களுக்கும் வளர்ந்த பின்பு தான் மனைவி லதா வளர்ப்பு சரியில்லை என்பதை உணர்ந்த ரஜினிகாந்த், தொடர்ந்து இரண்டு மகள்களால் ஏற்பட்டு வரும் பிரச்சனைகளால் மன நிம்மதியின்றி வேதனையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தனது இரண்டு மகள்களும் இருக்கின்ற சொத்துக்களை பாதுகாப்பாக வைத்து கொண்டு பொறுப்பான குடும்ப பெண்களாக இருக்க வேண்டும் என்பது தான் ரஜினிகாந்த் விருப்பம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சம்பாரித்த சொத்துக்களை பாதுகாத்தால் மட்டுமே இரண்டு மகள்களும் ஆஹா..ஓஹோ..என்று வாழலாம், ஆனால் இரண்டு மகள்களும் போட்டி போட்டு கொண்டு ரஜினிகாந்த் சம்பாரிக்கும் பணத்தை அழித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில், 3 படம் எடுத்து மிகப்பெரிய நஷ்டம், இதனை தொடர்ந்து மியூசிக் ஆல்பம் தயாரிக்கிறேன் என்கிற பெயரில் வெளிநாடுகளுக்கு சென்று வீண் செலவு செய்து வருகிறார் ஐஸ்வர்யா.

மேலும் யோக, பரதநாட்டியம் என வீட்டில் சும்மா இல்லாமல், தன்னுடைய மகன்களையும் கண்டு கொள்ளாமல், வெளிநாடுகளுக்கு அடிக்கடி ஷாப்பிங் செல்வது என ஐஸ்வர்யா ஒரு பக்கம் தந்தையின் பணத்தை ஐ காலி செய்து கொண்டிருக்கையில், மறுபக்கம் இரண்டாவது மகள் சௌந்தர்யா தனது தந்தையை வைத்து அனிமேசன் படம் எடுக்க விரும்பி பெரிய பட்ஜெட்டில் கோச்சடையான் படத்தை எடுத்து மிகப்பெரிய நஷ்டத்தை தந்தை ரஜினிகாந்துக்கு பரிசளித்தார் சௌந்தர்யா.

இதன் பின்பு சௌந்தர்யா இயக்கத்தில் விலையில்லா பட்டதாரி 2 பெரும் நஷ்டம், சமீபத்தில் பல கோடி முதலீட்டில் ஹூட் என்கிற செயலி ஒன்றை அறிமுகம் செய்தார். இது பேஸ்புக், டிவீட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு இணையாக வரவேற்பு பெற்று தானும் ஒரு தொழில் அதிபர் என பெயர் பெற்று விடலாம் என நினைத்த சௌதார்யாவுக்கு பெரும் நஷ்டம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது அக்கா ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நிலையில்,

தங்கை சௌதர்யாவும் மீண்டும் இயக்குனராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகள்களின் நடவடிக்கைகள் மீது கடும் அதிருப்தியில் உள்ள ரஜினிகாந்த், தான் சம்பாரித்த பணத்தை இரண்டு மகள்களும் போட்டி போட்டு அழித்து விட்டு என்னை நாடு ரோட்டில் நிறுத்த போகிறார்கள் என வேதனையுடன் தனக்கு நெருக்கமான குடும்ப நண்பர் ஒருவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சத்தமில்லாமல் சாதித்த நெப்போலியன்…பலர் வியந்து பார்க்க அமெரிக்காவில் என்ன செய்கிறார் தெரியுமா.?