இமான் வாழ்க்கையில் மட்டுமில்லை… தனுஷ் குடும்பத்திலும் கை வரிசையை காட்டிய சிவகார்திகேயன்…

0
Follow on Google News

சிவகார்த்திகேயன் எனக்கு மிக பெரிய துரோகத்தை செய்து விட்டார் என இமான் சமீபத்திய பேட்டி ஒன்றி பேசியது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. தம்பி மாதிரி நினைத்து பழகினேன் ஆனால் எனக்கு மிக பெரிய துரோகத்தை செய்துவிட்டார் சிவகார்த்திகேயன், இதை யாரும் சொல்லி நான் தெரிந்து கொள்ளவில்லை, நானாகவே உணர்தேன் என பேசிய இமான்.

குழந்தைகள் எதிர்காலம் கருதி இந்த விஷயத்தை இதற்கு மேல் பேச விரும்ப வில்லை என்றும், மேலும் சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்துக்கு இந்த ஜென்மத்தில் அவருடன் மீண்டும் பணியாற்றுவதற்கான வாய்ப்பே இல்லை என இமான் தெரிவித்து இருந்தார். இமான் வெளிப்படையாக சிவகார்த்திகேயன் என்ன துரோகம் செய்தார் என தெரிவிக்கவில்லை என்றாலும் சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் என்ன நடந்துருக்கும் என்பதை தொடர்ந்து ஓரளவு புரியும் படி அம்பலப்படுத்தி வருகிறார்கள்.

நடக்கும் சம்பவங்களை வைத்து பார்த்தால் சிவகார்த்திகேயன் இமானின் முதல் மனைவி மோனிகாவுடன் தொடர்பில் இருந்து வந்ததர்க கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து எந்த ஒரு படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இமான் தன் மனைவியை விவாகரத்து செய்ய காரணமே சிவகார்த்திகேயன் தான் என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டும் அல்லாமல் தனுஷ் – சிவகார்த்திகேயன் இடையில் ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டு இதுவரை தனுஷ் -சிவகார்த்திகேயன் இருவரும் பேசி கொள்ளாமல் இருந்து வருவதற்கு, இமானுக்கு செய்த அதே துரோகத்தை தான் தனுஷ்க்கு செய்துள்ளார் சிவகார்த்திகேயன் என்றும், அந்த வகையில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவும் சிவகார்த்திகேயன் தான் காரணம் என செய்தி ஒன்று உலா வந்த நிலையில்,

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், சிவகார்த்திகேயன் தன்னுடன் பழுகுபவர்களுக்கு இப்படித்தான் துரோகம் செய்து வந்துள்ளார் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பயில்வான். தனுஷ் அறிமுகம் செய்துவைத்த 3 படத்தில் நடித்தபோதே தனுஷின் மனைவி ஐஸ்வர்யா உடன் கிசுகிசுக்கப்பட்டார்.

ஆனால், இதெல்லாம் வெளியே சொல்ல முடியாது என டி. இமான் பேசிய ஸ்டைலிலே பேசி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். மேலும் சிவகார்த்திகேயனுக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும். மேலும் குடி, சிகரெட் பிடிக்காதவர்கள் உத்தமன் என்று சொல்ல முடியாது என தெரிவித்த பயில்வான்.அதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயம் பாடி டிமாண்ட் பற்றியது.

ஆகையால் சிவகார்த்திகேயனை மட்டும் தப்பு சொல்ல முடியாது. அவர் என்ன பலவந்தப்படுத்தினாரா, இருவரின் விருப்பம் இருந்தால் மட்டுமே இது நடந்திருக்க கூடும். அதே நேரத்தில் தற்பொழுது உருவெடுத்துள்ள இந்த விவகாரம் சிவகார்த்திகேயன் குடும்பத்தில் கண்டிப்பாக பிரச்சனையை ஏற்படுத்தும்.

அந்த கருத்து மோதல்கள் வெளியே தெரியாமல் இருந்தால் நல்லது. வெளியே தெரியும் பட்சத்தில் சிவகார்த்திகேயனின் இமேஜ் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். இந்நிலையில் இதுவரை நம்ம வீட்டு பிள்ளையாக சிவகார்திகேயனை கொண்டாடி வந்த தமிழக மக்கள் மத்தியில் இமான் விவாகரத்துக்கு பின்பு சிவகார்திகேயன் பற்றி ஒவ்வொரு விஷயமாக வெளிவருவது சிவகார்த்திகேயன் இமேஜ் மிக பெரிய அளவில் டேமேஜ் ஆகி வருவதை பார்க்க முடிகிறது.