இனி யாராவது சிறகடிக்க ஆசை பார்ப்பார்களா… மீனா ஒர்ஸ்ட்… சுருதி தான் பெஸ்ட்…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல், மற்ற அணைத்து சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் ரீச் ஆவதற்கு முக்கிய காரணம் இதில் இடம்பெற்றுள்ள மீனா மற்றும் முத்து கதாபாத்திரம் தான். ஒரே சீரியலில் முத்து மற்றும் மீனா இருவருக்கும் மிக பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டார்கள் என்றே சொல்லலாம்.

இதில் நிச்சயம் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த் வெள்ளி திரையில் ஒரு ரவுண்டு வருவார் என்றே எதிர்பார்க்க படுகிறது, அவருடைய இயல்பான நடிப்புக்கு சரியான கதை அமைத்தால், வெள்ளி திரையில் நடிகர் விஜய் சேதுபதி போன்று ஒரு ரவுண்டு வருவார் வெற்றி வசந்த் என்பதில் சந்தேகம் இல்லை. முத்து மற்றும் மீனா இருவரும் இந்த சீரியலை தூக்கி பிடித்தாலும் சமீப நாட்களா சீரியல் பார்க்கும் மக்களை வெறுப்படைய செய்து வருகிறார் மீனா.

மீனா கதாபாத்திரம் ஒரு உண்மை தன்மை இல்லாமல், எவ்வளவு பெரிய ரணகளம் குடுமபத்தில் நடந்தாலும், ஒண்ணுமே நடக்காதது போன்று, அத்தை காபி சாப்பிடுகிறீர்களா.? மாமா காபி சாப்பிடிக்கிறீர்களா.? என கேட்பது, பார்ப்பவர்களை வெறுப்படைய செய்து வருகிறது. ஒவ்வொரு முறையும் மனோஜ் தப்பு செய்யும் பொழுது, சரி நடந்தது நடந்து போச்சு, எல்லாம் அவங்க அவங்க வேலையை பாருங்க என அண்ணாமலை கடந்து செல்வது, உன்னை சொல்லி குற்றமில்லை இந்த சீரியலை விடாம பார்க்கிறோமே எங்களை தான் சொல்லணும் என தலையில் அடித்து கொள்கிறார்கள் சீரியல் பார்க்கும் மக்கள்.

இந்நிலையில் மீனா நகையை மனோஜ் விற்றுவிட்டு கவரிங் நகையாக மாற்றி வைத்த விவகாரத்தில் மனோஜ் மாட்டினாலும் இங்க ஒன்னும் நடக்க போவது இல்லை, வழக்கம் போல் அண்ணாமலை ஜடம் மாதிரி கடந்து சென்று விடுவார், மீனா அத்தை காபி போடவா என கேட்பார் என ரசிகர்கள் மனோஜ் மாட்டுவதர்க்கு முன்பே கமெண்ட் செய்து வந்த நிலையில், அதில் எந்த மாற்றமும் இல்லை, அது தான் தற்பொழுது அரங்கேறி வருகிறது.

அண்ணாமலை இனி விஜயா கூட மேசமாட்டேன் என சொல்ல, குடுமபத்தினர் சமாதானம் செய்து பேச வைக்கிறார்கள். அந்த வகையில் நகை மேட்டர் வழக்கம் போல் சப்புன்னு ஆகிவிட்டது என மிக பெரிய எதிர்பார்ப்பில் எந்த சீரியலை பார்த்த மக்கள் கடுப்பில் இருக்க, மறுப்பக்கம் மக்கள் எதற்காக எதிர்ப்பது காத்திருந்தார்களோ அந்த காட்சிகள் தற்பொழுது சிறகடிக்க ஆசை சீரியலில் அரங்கேறி வருகிறது.

அதாவது மீனாவை ஒருபக்கம் மக்கள் வெறுக்க தொடங்கிய வரும் நிலையில், மறுபக்கம் சுருதி தூக்கி கொண்டாடி வருகிறார்கள். விஜயவை மீனா எதிர்த்து கேள்வி கேட்க மாட்டாரா.? என பலரும் அவளோடு எதிர்பார்த்து கொண்டிருக்கையில், சுருதி கேள்வி மேல் கேள்வி கேட்டு விஜயவை வெளுத்து வாங்கி வருவது, சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு இருந்த ரசிகர்கள் தற்பொழுது ஸ்ருதிக்கு மாறி வருகிறார்கள்.

அந்த வகையில் மீனா மக்களை வெறுப்படைய செய்து, மீனா இமேஜ் மிக பெரிய அளவில் டேமேஜ் ஆகி கொண்டிருக்கையில், இந்த மீனாவுக்காக சிறகடிக்க ஆசை சீரியலை பார்த்த மக்கள் இனி எங்க இந்த சீரியலை பார்க்க போகிறார்கள் என்கிற நிலையில், தற்பொழுது ஸ்ருதிக்காக பார்க்க தொடங்கிவிட்டனர், அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் மெயின் கேரக்டர் இனி சுருதி தான் என்பது போன்று மிக விறுவிப்பாக சென்று கொண்டிருக்கிறது சுருதி கேரக்டர்.