உண்மையை சொல்… உனக்கு குழந்தை இருக்கு தான… ரோகிணியை கையும் களவுமாக பிடித்த விஜயா.?

0
Follow on Google News

சிறகடிக்க ஆசையில் மீண்டும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ரோகினி விஷயம் தெரிந்து ஒட்டுமொத்த குடும்பமும் சுற்றி வளைத்து விட்டது என்றே சொல்லலாம். மீனா தங்கை சீதா வேலை செய்யும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்கிறார் ரோகினி. ஆனால் ரோகினி ஏற்கனவே குழந்தை பெற்றுக் கொண்டார் இரண்டாம் முறையாக குழந்தை பெறுவது குறித்து பரிசோதனை செய்ய வந்தார் என்கின்ற தகவல் சீதாவுக்கு தெரிய வருகிறது.

சீதாவும் இந்த தகவலை அக்கா மீனாவிடம் தெரிவிக்கிறார். ஆனால் மீனா சீதாவிடம் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என சொல்லிவிட்டு வீட்டுக்கு செல்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை சுருதியிடம் தெரிவிக்கிறார் மீனா. இதை கேட்டது சுருதிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. இதனைத் தொடர்ந்து சுருதி தன்னுடைய கணவர் ரவியிடம் உங்க அண்ணி ரோகினிவுக்கு ஏற்கனவே குழந்தை உள்ளது,

தற்பொழுது இரண்டாவது குழந்தைக்காக பரிசோதனை செய்ய மருத்துவமனை சென்றார், இது மீனாவின் தங்கை மீனாவுக்கு சொல்லி, மீனா என்னிடம் சொன்னார் என சுருதி கணவர் ரவியிடம் தெரிவிக்க, ரவி இதை முத்துவிடம் தெரிவிக்கிறார். உடனே முத்து இதை எப்படி தன்னுடைய தந்தையிடம் தெரிவிக்கிறது என தன்னுடைய தந்தையை மொட்டை மாடிக்கு தனியாக அழைத்து வந்து மொத்த விஷயத்தையும் போட்டு உடைக்கிறார்.

உடனே இந்த விஷயத்தை விஜயாவிடம் அண்ணாமலை தெரிவிக்க விஜயா பொங்கி எழுகிறார், எப்படி நம்ம வீட்டு மருமகளை இப்படி தப்பாக பேசலாம் என்று பொங்கி எழுந்த விஜயா, உடனே மருமகள் ரோகினியை ஒட்டுமொத்த குடும்பத்தினர் முன்னிலையும் நேரில் அழைக்கிறார். ரோகிணி வெளியே வந்ததும் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் விஜயா, உண்மையைச் சொல் நீ ஏற்கனவே கர்ப்பம் அடைந்தையா என்று கேட்ககிறார் விஜயா.

சிறிது நேரம் கண்ணீர் விட்டு அழுகிறார் ரோகிணி. ஆனால் இந்த நாடகத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ரோகிணி எப்படா மாட்டுவார் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர், ஆகா ரோகிணி வசமாக மாட்டி விட்டார் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் லாபகரமாக ரோகிணி தனக்கு குழந்தை பிறந்ததை மறைத்துவிட்டு ஆம் நாம் ஏற்கனவே கர்ப்பம் அடைந்தேன். ஆனால் கரு கலைந்து விட்டது என்று பொய் சொல்லி ஒரு வழியாக சமாளித்து ஒட்டுமொத்த குடும்பத்தினரிடம் இருந்து தப்பித்து விடுகிறார்.

இப்படித்தான் இந்த முறையும் ரோகினி மாட்டுவார் என எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலின் இயக்குனர் விபூதி அடித்து விட்டு ரோகினியை லாபகரமாக காப்பாற்றி விடுகிறார். இருந்தாலும் இந்த விவகாரத்திற்கு பின்பு முத்து சுருதி மீனா ஆகியோருக்கு ரோகிணி மீது தொடர்ந்து சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. இதனை தொடர்ந்து குடும்பத்தில் நடந்த விவரத்தை தங்கை சீதாவிடம் தெரிவிக்கிறார் மீனா.

ஆனால் சீதா இதில் ஏதோ தப்பு இருக்கிறது அவருக்கு கரு கலையவில்லை ஏற்கனவே குழந்தை இருக்கிறது அதை நான் நிச்சயம் கண்டுபிடித்து தருகிறேன் என்று. ரோகிணி வந்து சிகிச்சை பெறுவது குறித்து மருத்துவமனையில் தீர விசாரிக்க தெரிகிறார் ஆனால் ஒரு கட்டத்தில் சீதாவிற்கு உண்மை தெரிந்து விட்டது, அதாவது ஏற்கனவே ரோகிணி குழந்தை பெற்றுக் கொண்டவர் என்கின்ற உண்மை சீதாவுக்கு தெரிந்து விடுகிறது. ரோகிணி விஷயத்தை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வது குறித்து மீண்டும் மருத்துவமனைக்கு சீதாவிடம் விசாரிக்க வரும் சுருதியிடம் தெரிவிக்கிறார் சீதா.இதன் பின்பு தான் ரோகிணிக்கு மிக பெரிய சிக்கல் குடும்பத்தில் உருவாகிறது.