மீனாவை காணவில்லை… விஜயாவை தட்டி தூக்கிய போலீஸ்…. சார் என்ன விட்டுருங்க… சிறகடிக்க ஆசையில் கதறும் விஜயா…

0
Follow on Google News

முத்து மீது இருக்கும் கோபத்தில் மீனா வீட்டை விட்டு வெளியே சென்றவர், எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் தேடி அலைகிறார்கள். இந்த நிலையில் மனோஜ் விஜயாவிடம் மீனா ஏதாவது லெட்டர் எழுதி வைத்துவிட்டு ஏதாவது செய்திருப்பாலோ என விஜயாவை பயமுறுத்துகிறார். விஜயாவும் பயந்து போய் அப்படியெல்லாம் இருக்காது ஏதாவது கோவில்ல இருப்பா என சமாளித்து செல்கிறார்.

இந்த நிலையில் சிட்டி மீனாவின் தம்பியிடம் அக்காவை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்குமாறு மீனாவின் தம்பி உசுப்பேத்தி விடுகிறார். சிட்டி முத்துவை எப்படியாவது ஜெயிலுக்கு அனுப்பி விட வேண்டும் என்ற குறிக்கோளோடு கூறுகிறார். அதே சமயத்தில் முத்துவின் நண்பன் முத்துவிடம் டைம் ஆகிவிட்டது பேசாம நீ போய் போலீஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் பண்ணிரு என்று கூறுகிறார். இதைக் கேட்டு முத்துவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்.

அங்கே முத்துவுக்கும் சத்யாவுக்கு வாக்குவாதம் ஏற்ப்படுகிறது, இவர் தான் சார் எங்க அக்கா உடன் சண்டை போட்டு, வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார், இவங்க அம்மா எப்ப பார்த்தாலும் எங்க அக்காவை கொடுமை படுத்துவார், இவங்க வீட்டில் மற்ற இரண்டு மருமகள் பணக்காரர்கள், எங்க அக்கா மட்டும் ஏழை என்பதால், வரதட்சணை கேட்டு கொடுமை படுவார்கள் சார் என விஜயா மீதும் முத்து மீதும் சத்யா போலீசாரிடம் புகார் தெரிவிக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷன்ல சத்யாவை அடிக்க பாய்கிறார் முத்து, அங்கே இருந்தவர்கள் சத்தமிட்டு அமைதி காக்க சொல்கிறார்கள், இதனை தொடர்ந்து மீனாவை குடும்பத்தினர் ஒரு பக்கம் தேட போலீசாரும் தேடுதலை தொடர்கிறார்கள், முத்துவிடம் மீனா குறித்து விசாரித்த போலீசார், மாமியார் மருமகள் பிரச்சனையாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் விஜயாவை போலீசார் விசாரிக்க வேண்டும் என முத்துவிடம் அழைத்து வர சொல்கிறார்கள்.

முத்துவும் விஜயாவை போலீசார் உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என விஜயாவிடம் தெறிவிக்க, ஏற்கனவே மனோஜ் விஜயாவை மயமுறுத்தி வைத்திருந்த நிலையில், அய்யோ வேறு எதாவது நடந்து இருக்குமோ, நம்மல போலீஸ் தூங்கி உள்ளே வைத்து விடுவார்களோ என பீதியில் இருக்கும் விஜயா, மனோஜ் ரோஹிணி நீங்க இரண்டு பேரும் என்கூட போலீஸ் ஸ்டேஷன் வாங்க எனக்கு பயமா இருக்கு, என மனோஜ் – ரோஹிணியை அழைக்கிறார் விஜயா.

ஆஹா நம்ம ரெண்டு பெரும் போலீஸ் ஸ்டேஷன் சென்றால், அந்த 30 லட்சம் மேட்டர் வெளியே வந்து விடுமே என நைசாக விஜயாவிடம் நழுவி எஸ்கேப் ஆகிறார்கள் மனோஜ் – ரோகினி இருவரும். இந்த நிலையில் ஒருவழியாக பயந்து பயந்து போலீஸ் ஸ்டேஷன் செல்லும் விஜயாவிடம், போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு வித அச்சத்திலே பதில் சொல்லுகிறார் விஜயா, ஏம்மா உங்க மற்ற இரண்டு மருமகள் பணக்காரர்கள் என்பதால் ஏழை மருமகளான மீனாவை அதிகமா வேலை வாங்குவீர்களா.?

வரதச்சனை கொடுமை படுத்துவீர்களா.? என போலீசார் விசாரணை மேல் விசாரணை நடத்தி ஒரு வழியாக திருப்பி விஜயாவை அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் மீனா கிடைக்கவில்லை என்றால் போலீசார் நம்மை சும்மா விடமாட்டார்கள் என்கிற அச்சத்திலே விஜயா இருந்து வருகிறார்.இப்படி போலீசார் ஒரு பக்கம் தேட, குடும்பத்தினர் ஒரு பக்கம் தேட ஒரு வழியாக மீனாவை முத்து கண்டு பிடித்து விடுகிறார்.

மீண்டும் வீட்டிற்கு வரும் மீனா, அத்தை எதும் காபி போடணும் என கேட்க, அம்மா எனக்கு நீ எதுவுமே செய்ய வேண்டாம், நானும் உன்னிடம் எதுவும் சொல்லமா தாயே, நீ திரும்ப கோப பட்டு வீட்டை விட்டு வெளியே போனால் போலீஸ் என்ன தான் கேள்வி கேட்கும், என இந்த சம்பத்துக்கு பின்பு மீனாவிடம் விஜயா சற்று அடக்கி வாசிக்கிறார்.