பார்லரில் வைத்து ரோகிணியை கையும் களவுமாக பிடித்த முத்து…. இனி தப்பிக்கவே முடியாது…

0
Follow on Google News

எஸ்.குமரன் அவர்களின் எதார்த்தமான கதைக்களத்தில் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை. கூட்டுக் குடும்பம், பணத்திற்கு ஆசைப்படாத நியாயம், நேர்மை என இருக்கும் அண்ணாமலை, அவரது மனைவி விஜயா, மனிதர்கள் பெரிய விஷயம் இல்லை, பணக்காரர்கள் தான் நல்லவர்கள், முக்கியமானவர்கள் என இருப்பவர். இவர்களுக்கு 3 மகன்கள், இவர்களை சுற்றியே இந்த தொடர் கதைக்களம் செல்கிறது.

இப்போதைக்கு விஜய் டிவியின் டிஆர்பி மானத்தை காப்பாற்றக்கூடிய ஒரே சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை சீரியல்தான். இந்த நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குனர் சரியாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருப்பது தான் இந்த சீரியலின் பிளஸ் பாயிண்ட். இதில் ரோகினி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சல்மா அருண் அந்த கேரக்டருக்கு நச்சுனு பொருந்தி இருக்கிறார்.

கடந்த சில நாட்களாக அண்ணாமலை தனது மூன்று மகன்கள் மற்றும் மருமகள்களுடன் தனது சொந்த ஊருக்கு சென்ற காட்சிகள் இருந்தன என்பதும் அங்கு ரோகினி மாமா என்று கூறிக்கொண்டு வந்த மலேசியா மாமாவும் வந்து கலகலப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் ஒரு வழியாக தற்போது கிராமத்திலிருந்து வீட்டிற்கு அண்ணாமலை குடும்பத்தினர் திரும்பி உள்ளனர். வீட்டிற்கு வந்த அடுத்த நிமிடமே விஜயா வழக்கம்போல் தனது அதிகாரத்தை மீனாவின் மீது செலுத்த ஆரம்பித்து விட்டார்.

இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் விஜயா ரோகினியின் மாமா வந்ததை பற்றி வீட்டிற்கு வந்ததும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனாவும் தன்னுடைய ரூமுக்கு போக அதற்கு விஜயா என்ன மீனா நீ ரூமுக்கு போற இந்த வீட்டில நிறைய வேலை இருக்கு எல்லாத்தையும் செய்யணும் ஊர்ல தான் பாட்டி பாட்டினு சொல்லிக்கிட்டு இருந்த, இந்த வீடு என் வீடு எல்லா வேலையும் நீ தான் பாக்கணும் என்று சொல்ல, அதற்கு முத்து அதான் உங்க வீடுன்னு எழுதி நெத்தியில ஒட்டிக்கோங்க எல்லோரும் பார்த்து தெரிஞ்சுக்கட்டும் என்று கிண்டல் செய்கிறார். பிறகு மீனாவை சமைக்க சொல்லிவிட்டு காபி போட்டுட்டு வரவும் சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து பார்வதி வீட்டிற்கு வர விஜயா தனியாக பேச வேண்டும் என்று ரூமிற்க்கு போகிறார். அப்போது ஸ்ருதி முகத்தில் அடித்தது போல கதவை சாத்த அதை பார்த்து விஜயா அதிர்ச்சியாகிறார், அடுத்ததாக சரிப்பா நம்ம அந்த ரூமுக்கு போகலாம் என்று விஜயா பார்வதியை கூட்டிட்டு போக அங்கு ரோகிணியும் மனோஜும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்ததும் இதுவும் வேண்டாம் என்று விஜயா அடுத்த ரூமிற்கு போக அங்கு முத்து தூங்கிக் கொண்டிருக்கிறார்.

பிறகு விஜயா பார்வதியை கூட்டிக்கொண்டு மொட்டைமாடிக்கு வந்து பேசுகிறார். அப்போது ரோகினி ஓட அப்பா மட்டும் வந்தால் அவர் கொடுக்கிற பணத்தை வைத்து மூன்று அடுக்குல வீடு கட்டணும் வீட்டிலேயே லிப்ட் வைக்கணும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா காபியோடு வந்து நிற்க அதை பார்த்து கோபமான விஜயா நாங்க பேசுறதை ஒட்டு கேக்குறியா என்று திட்டுகிறார். அதற்கு மீனா அந்த பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது என்று காபியை கொடுத்துவிட்டு கோபமாக கீழே வருகிறார்.

அடுத்த கட்டத்தில் ரோகினி வித்யா ரூமிற்கு வந்து ஊரில் நடந்த விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு மலேசியா மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணி கறியோடு வந்து எனக்கு வாய்ப்பு கிடைத்து விடுமா என்று கேட்க அதற்கு வித்யா உனக்கு வாய்ப்பு கிடைக்கும் ஆனால் அதுவரைக்கும் நீ யாரு கண்ணுலயும் படக்கூடாது என்று வார்னிங் கொடுத்து அனுப்புகிறார்.

அடுத்த கட்டத்தில் ரோகினி வேலை பார்க்கும் பார்லர் ஓனரின் கார் வழியில் ரிப்பேர் ஆகி நிற்க அந்த ஓனர் ஆபீசில் இருக்கும் பெண்ணுக்கு போன் பண்ணி தனக்கு ஒரு கேப் புக் பண்ணி தரும்படி கேட்கிறார்.. அந்த கேப் வண்டியை ஓட்டிக்கொண்டு அங்கு முத்து வர முத்து அவரை ரோகிணியின் பார்லரில் டிராப் செய்கிறார். ஆனால் அந்தப் பெண் பணம் கொடுக்காமல் போன் பேசியபடியே பார்லருக்குள் போய்விடுகிறார். அதை பின் தொடர்ந்து பணத்தை வாங்குவதற்காக முத்துவும் செல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.