இதே ஒரு கேவலமான சீரியல்… பாண்டியன் ஸ்டார் சீரியலில் இருந்து வெளியான நடிகர் வேதனை..

0
Follow on Google News

விஜய் டிவியில் சக்கைப்போடு போட்ட சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகம் கடந்த 2023ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், அந்த சீரியலின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகம் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த சீரியலின் இரண்டாம் பாகம் தந்தை மகன்களின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் டிஆர்பி ரேட்டிங்கிலும் படிப்படியாக முன்னேறி வருகிறது. சீரியலில் பாண்டியன் தன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இதனால் இவர் பெருமிதமாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையில் எதிர்ப்பாராத விதமாக காதல் திருமணம் நடந்து விடுகிறது.

இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். பின் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்க மயிலை திருமணம் செய்து வைக்கிறார். தங்க மயில் வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்கள் நடக்கிறது.

தற்போது சீரியல் மூத்த மகன் சரவணனையும், மருமகள் தங்க மயிலையும் ஹனிமூன் போக பாண்டியன் சொல்கிறார். அதற்கு சரவணன் தனது தம்பிகளையும் ஹனிமனுக்கு அனுப்ப வேண்டும் தனது விரும்புகிறார். ஆனால் பாண்டியன் அதற்கு மறுக்கிறார். இதனால் வீட்டில் பாண்டியனுக்கும், மனைவி கோமதிக்கும் சில சண்டைகள் நடக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் வெங்கட் கதாபாத்திரத்தில், முதலில் வசந்த் வசீதான் நடித்திருந்தார். அதாவது பாண்டியனின் இரண்டாவது மகன் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே சமீபத்தில் அவர் இந்த சீரியலில் இருந்து விலகியதால், தற்போது நடிகர் வெங்கட் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அனைவராலும் கவரப்பட்ட கேரக்டராக வசந்த் வசியின் செந்தில் கதாபாத்திரம் அமைந்திருந்தது. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் வசந்த் வசி கலந்துகொண்டு அசத்தினார். இந்த நிலையில், தற்போது ஒரு பேட்டியில் அவர் எதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகினார் என்பதை பற்றி கூறினார்.

அதில், நடிகர் வசந்த் வசிக்கு படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மேலும், அவர், நான் சீரியலில் இருந்து விலகியதற்காக நிறைய வதந்திகள் பரவி வருகின்றது. அவை எதுவுமே உண்மை இல்லை. பின் எனக்கும் நடிகை ஹேமாவிற்கும் கருத்து வேறுபாடு  இருப்பதாகவும், எனக்கும் ப்ரொடக்ஷன் டீமுக்கும் நிறைய பிரச்சனை இருப்பதாகவும் வதந்திகள் பரவுகிறது.

அவை எதுவுமே உண்மை கிடையாது. பட வாய்ப்புகள் வருவதால் தான் சீரியலில் இருந்து விலகினேன். இது முழுக்க முழுக்க நான் எடுத்த முடிவுதான் என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, அவர் இப்போதைக்கு படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தப் போவதாகவும். சீரியலில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். அதன்படி வசந்த் வசிக்கு பதிலாக நடிகர் வெங்கட், செந்தில் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

வெங்கட் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார். இதில் மற்றொரு ஆச்சர்ய தகவல் என்னவென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் வெங்கட்டுக்கு ஜோடியாக நடித்த ஹேமா தான் தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இவர்களது கெமிஸ்ட்ரி முதல் பாகத்திலேயே ஹிட்டடித்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.