சொன்ன கேளுங்க.. சொல்ல சொல்ல கேட்காத மாரிமுத்து… மரணத்திற்கு முன்பே வந்த எச்சரிக்கை…

0
Follow on Google News

எதிர்நீச்சல் புகழ் நடிகர் மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தான் நடிக்கும் சீரியலுக்காக டப்பிங் செய்து கொண்டிருக்கும் போதே அசௌகரியத்தை உணர்ந்த மாரிமுத்து, தானாகவே காரை எடுத்து மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றிருக்கிறார் என்பது அனைவரையும் திடுக்கிடச் செய்தது.

நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்ட போதிலும், சக நடிகரிடம் கூட தெரிவிக்காமல் யாருக்கும் தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார் என்றால், நடிகர் மாரிமுத்துவிற்கு ஏற்கனவே தனது உடல்நிலை பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று இணையத்தில் யூகித்து வந்தனர்.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு 11 நாட்களுக்கு முன்னரே அவரது உடல்நிலை குறித்து எச்சரித்ததாக, எதிர்நீச்சலில் அவருடன் நடித்து வரும் சக நடிகரான அப்பல்லோ ரவி தற்போது தெரிவித்துள்ளார். எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்த மாரிமுத்து ஆரம்பகாலத்தில் பல நாட்கள் பசியும் பட்டினியுமாய் நாட்களை கழித்திருக்கிறார்.

இயக்குனராக முயற்சி எடுத்த மாரிமுத்துவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் திரைப்படங்களை இயக்குவதை கைவிட்ட அவர், அடுத்ததாக படங்களில் குணச்சித்திர நடிகராக களமிறங்கினார். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய மாரிமுத்துவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இதுதான் சரியான நேரம் என்பதைப் புரிந்து கொண்ட அவர், கிடைக்கும் வாய்ப்புகள் அத்தனையையும் நழுவ விடாமல் இறுகப் பற்றிக்கொண்டார். நடிப்பு என்று வந்துவிட்டால் சின்னத்திரை என்ன.. வெள்ளித்திரை என்ன ..என்பது போல மாரிமுத்து அவரது மொத்த உழைப்பையும் போட்டு நடித்து ஆதி குணசேகரன் என்ற கேரக்டருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தார். வெள்ளித்திரையில் அவருக்குக் கிடைக்காத பேர், புகழ், பணம் அத்துனையும் ஆதி குணசேகரன் என்ற ஒற்றை கேரக்டர் பெற்றுக் கொடுத்தது..இவ்வாறு மக்களிடையே பிரபலமடைந்து கொண்டிருந்தாலும், அவருக்கு அவ்வப்போது கிடைக்கும் பட வாய்ப்புகளையும் அவர் விடவில்லை.

ஓயாது அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி சீரியல் மற்றும் சினிமா என இரண்டிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். இவ்வாறு சின்னத்திரை வெள்ளித்திரை என பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த மாரிமுத்து, அவரது உடல்நிலையை கவனத்தில் கொள்ளாமல் விட்டிருக்கிறார். ஆம், எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவுடன் நடித்த அப்பல்லோ ரவி மாரிமுத்து மரணம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்,

மாரிமுத்து இறப்பதற்கு 11 நாட்களுக்கு முன்பே அவரது உடல்நிலையை தான் கவனித்ததாக அப்பல்லோ ரவி கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது;”என்ன அண்ணே வயிறு ஜெமினி மேம்பாலாம் மாதிரி இருக்கிறது” என்று மாரிமுத்துவிடம் கேட்டதாகவும், அதற்கு மாரிமுத்து “நான் என பேஷண்ட்டா!! பாரு ஆரோக்கியமாகத்தான் இருக்கேன்” என்று சொல்லியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அன்றே நடிகர் மாரிமுத்துவின் வயிற்றில் ஏதோ வித்தியாசம் தெரிந்ததாக அப்பல்லோ ரவி பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மருத்துவத் துறையில் இருக்கும் ரவி, “அண்ணே இரண்டு மணி நேரம்தான் ஆகும். ஒரு செக்கப் எடுத்துக்கலாம்” என்று கேட்டதற்கு மாரிமுத்து மறுப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறு மாரிமுத்து செக்கப்-க்கு வர மறுத்த போது அவரது PA-வும் அருகில் இருந்ததாகவும், அதனையடுத்து மாரிமுத்துவின் உயிரிழப்புக்கு அப்போல்லோ ரவி சென்ற போது, அந்த PA ரவியை கட்டியணைத்து “அப்பல்லோ அண்ணே நீங்க அன்னைக்கே சொன்னீங்க. அப்போ வந்திருந்தா இப்படி நடந்துருக்காதே ” என்று வேதனைப் பட்டதாகவும் கூறினார். இன்று அதை நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது என்று ரவி சோகத்துடன் பேட்டியில் என்பது குறிப்பிடத்தக்கது.