ரோஹிணிக்கு ஏற்கனவே குழந்தைக்கு இருக்கு… முத்து கையில் மெடிக்கல் ரிப்போர்ட்…

0
Follow on Google News

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போது கையும் களவுமாக மாட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் தற்பொழுது வந்துவிட்டது. ரோகிணி கையும் களவுமாக மாட்டியே விட்டார். எப்படி அவர் கையும் களவுமாக மாட்டினார் என்பதை பார்க்கலாம். தற்பொழுது ரோகிணி இதற்கு மேல் நாம் பொய் சொல்லி மாமியார் விஜயா மற்றும் மனோஜ் ஆகியோரே ஏமாற்ற முடியாது என முடிவு செய்தவர்.

தற்பொழுது அவசரமாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ரோகிணிக்கு குழந்தை பிறந்தால் பின்பு ரோகினி செய்த பித்தலாட்டங்கள் தெரியவரும் பொழுது குழந்தைக்காக விஜயா மற்றும் மனோஜ் ஆகிய இருவருமே ரோகினியை விரட்டி விட மாட்டார்கள், அரவணைத்துக் கொள்வார்கள் என்கின்ற ஒரு நோக்கத்தில் இரண்டாம் குழந்தையை பெற்றுக் கொள்வதற்காக மருத்துவமனையில் தன்னை பரிசோதனை செய்து கொள்கிறார் ரோகினி.

இந்த நிலையில் ரோகினி எந்த மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்கிறாரோ அதே மருத்துவமனையில் மீனாவின் தங்கை சீதா வேலைக்கு சேர்ந்துள்ளார். மேலும் சீதா வேலை செய்யும் அதே மருத்துவமனைக்கு சென்று சுருதி தனக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் அதற்கான உதவிகளை நீ செய்ய வேண்டும் என்றும் சீதாவிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கிறார்.

இப்படி ரோகினி எந்த மருத்துவமனையில் தனக்கு இரண்டாம் குழந்தை பிறப்பதற்கான பரிசோதனை செய்கிறாரோ அதே மருத்துவமனையில் சீதா வேலை பார்க்கிறார், அதே மருத்துவமனையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்காக சுருதி முயற்சி செய்கிறார். மேலும் தன்னுடைய தங்கையை அடிக்கடி பார்க்க மீனாவும் அந்த மருத்துவமனைக்கு வருகிறார்.

இப்படி சென்று கொண்டிருக்கையில், ஏற்கனவே ரோகிணி மருத்துவமனைக்கு வந்து சென்றதால் ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என புரிந்து கொண்டு வீட்டில் அனைவரிடமும் சொல்லி இறுதியில் அது தவறான தகவல் என மாமியாரிடம் சேமத்தியாக வாங்கி கட்டிக் கொண்டார் மீனா. இந்த நிலையில் ரோகிணி இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தன்னுடைய உடலை பரிசோதனை செய்தது அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் சீதாவிற்கு தெரிய வருகிறது.

உடனே இந்த தகவலை தன்னுடைய அக்கா மீனாவிடம் தெரிவிக்க மீனா ஷாக் ஆகிறார். இருந்தாலும் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மீனா மூடி மறைக்கிறார்.இந்த நிலையில் ஒருமுறை சுருதியும் அந்த மருத்துவமனைக்கு வர அப்போது ரோகிணி அந்த மருத்துவமனையில் இருப்பதை பார்த்து சீதா மூலம் ரோகிணி இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள இருக்கிறார், ஏற்கனவே அவருக்கு குழந்தை இருக்கின்ற தகவல் சுருதிக்கும் தெரிய வருகிறது.

இதனைத் தொடர்ந்து சீதாவும் இது அக்கா மீனாவுக்கும் ஏற்கனவே தெரியும் என ஸ்ருதியிடம் தெரிவிக்க, அதை ஏன் இவங்க மூடி மறைக்கிறார்கள் என மீனாவுடன் பேசி இந்த தகவலை சுருதி அவருடைய கணவர் ரவி இடமும் முத்து விடவும் கொண்டு செல்கிறார்கள். முத்து இதற்கு ஏதாவது ஆதாரம் வேண்டுமே என முத்து கேட்க அதற்கு சீத்தா வேலை செய்யும் மருத்துவமனையில் உள்ள ரோகினி மெடிக்கல் ரிப்போர்ட்டை காண்பித்து அதிர்ச்சி அடைய செய்கிறார்.

இருந்தாலும் நம்ம அனைவரும் எதுவும் தெரியாத மாதிரியே இருப்போம் முதலில் ரோகினி பற்றிய குடும்ப பின்னணியை கண்டு பிடிப்போம் என முத்து தெரிவித்து, யாரும் இதை வீட்டில் அப்பா, அம்மா, மனோஜிடம் சொல்ல கூடாது என தெரிவிக்கிறார் முத்து. இப்படியே சென்று கொண்டிருக்கின்ற சிறைடிக்க ஆசையில் ஒட்டு மொத்தமாக சுருதி, ராவி, முத்து மீனா என குடும்பத்தினர் மத்தியில் கையும் களவுமாக மாட்டியுள்ள ரோகினி எப்படி சமாளித்து தப்பிக்கப் போகிறார் என்கின்ற பரபரப்பு அடுத்தடுத்து ஒளிபரப்பாக இருக்க இருக்கிறது.