இதுக்கு மேல ரஜினிகாந்த உங்களுக்கு சம்பாரிச்சு கொடுக்கணுமா.? ஏன் ரஜினிகாந்த் குடும்பத்தினர் இப்படி செய்கிறார்கள்.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த்க்கு கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்திலிருந்து வீக்கம் சரி செய்யப்பட்டு நன்றாக இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது ரஜினிகாந்த் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் யாரும் அவருக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை. ஆனால் அவருடைய வயதின் காரணமாக உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் நிச்சயமாக மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த்.

ஆரம்ப காலகட்டத்தில் ரஜினிகாந்த் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது என வாழ்ந்து வந்தவர், ஆனால் இடைப்பட்ட காலத்தில் தன்னிடம் இருந்த தீய பழக்கங்கள் அனைத்தையும் கைவிட்டு ஆன்மீகம் தியானம் என்று தன்னுடைய பாதையை மாற்றி விட்டார் ரஜினிகாந்தின். தற்பொழுது ரஜினிகாந்த் தற்பொழுது மருத்துவமனையில் இருந்து டிசார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்று சில காலம் நாட்கள் ஓய்வெடுத்து விட்டு. அதன் பின்பு கூலி படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து அவர் கமிட்டான ஜெயிலர் 2 படம் அடுத்தடுத்து என அவருக்காக வரிசை கட்டி நிற்கிறது ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படங்கள். ரஜினிகாந்த் சினிமாவில் யாரும் செய்ய முடியாத ஒரு சாதனையை செய்து விட்டார், இதற்கு மேலும் அவருக்கு பணம் புகழ தேவை இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அவர் நடிக்கும் படத்தில் அவருடைய வயதுக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்ய வேண்டும். தென்னிந்தியாவில் எப்படி ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரோ அதைவிட மிகப்பெரிய உச்சத்தில் இருக்கின்றவர் அமிதாப்பச்சன்.

அவரே தற்பொழுது வயதின் காரணமாக தனது வயிறுக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவருக்கு மரியாதை குறையவும் இல்லை மேலும் அவர் போற்றத்தக்க மனிதனாக தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் சினிமாவிற்கு நுழைந்ததில் 29 இளைஞனாக இருந்தபோது வயதான கேரக்டரில் நடித்தவர். அப்போது அந்த கேரக்டரே அவருக்கு பெயரும் புகழும் வாங்கி தந்தது.

இதுவரை பெயர் புகழ் பணம் என்று உச்சத்திலே வைத்து காலம் ரஜினிகாந்தை அழைத்து வைத்துவிட்டது. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தின் வயது காரணமாக அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு ஆக்சன் மற்றும் கமர்சியல் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு தனது வயதுக்கு ஏற்றார் போல் ஒரு கதையை தேர்வு செய்து ரஜினிகாந்தின் நடிக்க வேண்டும் என்பதே பலருடைய அட்வைஸ் ஆக தற்பொழுது உள்ளது.

ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் டூ போட்டு தான் காட்சி எடுக்கப்படுகிறது என்றாலும் கூட அந்த படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் வெயிலிலும் நீண்ட நேரம் நிற்பது கூட அவருடைய உடல் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறார்கள். அந்த வகையில் வியாபாரம் நோக்கில் இனி படத்தில் கமிட்டாகாமல் பணம் புகழ் என்று இதற்கு மேல் ரஜினிகாந்துக்கு வேண்டுமா என்று சிந்தித்து, அவருடைய வயதுக்கு ஏற்றால் போன்று கதையை கதையைத் தேர்வு செய்து படம் நடித்து அவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல தமிழர் மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

அந்த வகையில் ரஜினிகாந்துக்கு இனி வரும் காலங்களில் அவருடைய குடும்பத்தினரும் ஓய்வு கொடுக்கும் வகையில் அவரை படங்களில் கமிட்டாக விடாமல் பார்த்து கொள்ளவேண்டும், இதற்கு மேல் அவருடைய குடும்பத்திற்கு ரஜினிகாந்த் சம்பாரித்து கொடுக்க வேண்டுமா.? இதுவரை அவர் சம்பாரித்து கொடுத்த பணம் போதாதா.? என்பதையெல்லாம் சிந்தித்து ரஜினிகாந்த் குடுமப்த்தினர் போட்டி போட்டு அடுத்தடுத்து படங்களில் கமிட் செய்ய விடாமல் அவருடைய வயதுக்கு ஏற்றார் போன்று அவரை பாதுக்காக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here