கமல்ஹாசனுக்கே ஆப்பு வைத்த பிரியங்கா.. பிக் பாஸ் ஷோவில் இருந்து கமல்ஹாசன் விலக என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

விஜய் டிவியா இல்லை.? இது பிரியங்கா டிவியா.? என்கின்ற அளவிற்கு விஜய் டிவியை பிரியங்கா முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டார் என்கின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்து நிலையில், தற்பொழுது சினிமா வட்டாரங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் பேச்சு தான்.

சமீபத்தில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக எனக்கு தன்மானமா.? இல்லை வருமானமா.? என்று வரும்போது எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்று பிரியங்காவின் அடக்குமுறைக்கு அடிபணியாமல் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் தொகுப்பாளினி மணிமேகலை. இந்நிலையில் மணிமேகலை போன்று இன்னும் பலரும் பிரியங்காவால் வெளியேற்றப்பட்டார்கள் என்று அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

குறிப்பாக விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தில் உள்ள முக்கிய நபர்களை தன் கைக்குள் வைத்துக்கொண்டு நினைத்ததை சாதுரியமாக சாதித்து விடுவார் பிரியங்கா என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியாக இருந்த டிடி, ரம்யா போன்ற பலரும் வெளியேறுவதற்கு காரணம் பிரியங்கா தான் என பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரியங்காவை விஜய் தொலைக்காட்சியினர் பங்கேற்க வைத்து அவரை வின்னர் ஆக்குவதற்கான பல வேலைகளை செய்து இருக்கிறார்கள் பிக் பாஸ் குழுவினர். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவிற்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையிலே பிக் பாஸ் குழுவினர் பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார்கள்.

குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவின் நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் பிரியங்காவுக்கு அவர் பெயரை ஏற்படுத்தி பிரியங்கா சரிவை சந்தித்து வந்த நிலையில், பிரியங்காவிடம் மக்களை கவரும் வகையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சில டிப்ஸ் கொடுத்து வந்திருக்கிறார்கள் பிக் பாஸ் குழுவினர், அதே போன்று பிரியங்காவை எப்படியாவது டைட்டில் வின்னர் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக பல வேலைகளை செய்து வந்திருக்கிறார்கள் பிக் பாஸ் குழுவினர்.

ஆனால் இதை அறிந்த அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் இதுபோன்று தில்லாலங்கடி வேலைகளை செய்தால் நான் உண்மையை போட்டு உடைத்து விடுவேன் , நியாயமாக மக்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவர்கள் தான் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.

பிக் பாஸ் குழுவினர் பிரியங்காவுக்காக கமல்ஹாசனிடம் எவ்வளவோ பேசி கமலஹாசன் முடியவே முடியாது என மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அப்போதே கமலஹாசனுக்கும் பிக் பாஸ் குழுவினருக்கும் இடையில் ஒரு உரசல் ஏற்பட்டது, இதற்கு பிக் பாஸ் குழுவினர் தங்கள் அதிருப்தியை கமலஹாசனிடமே வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதற்கு கமல்ஹாசன் உங்களுக்கு டிஆர்பி ரேட்டிங் தான் முக்கியம் என்றால் நீங்கள் அடுத்த சீசனில் வேற யாரையாவது வைத்து நடத்திக் கொள்ளுங்கள் என்று கமல்ஹாசன் அப்போதே தெரிவித்து விட்டதாகவும், அதனால்தான் இந்த சீசன் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே நான் இந்த சீசனில் இருந்து வெளியேறுகிறேன் என்று கமல்ஹாசன் அறிவிப்பு வந்ததும் அதன் பின்பு விஜய் சேதுபதி உள்ள வந்ததும் காரணம் எனக் கூறப்படுகிறது.

அந்த வகையில் பிரியங்காவை பகைத்துக் கொண்டு மணிமேகலை மட்டுமல்ல கமல்ஹாசன் கூட விஜய் தொலைக்காட்சியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் பண்ண முடியாதபடி விஜய் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டில் பிரியங்கா வைத்திருக்கிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here