தனியாக தவிக்கும் சைந்தவி… ஜி.வி பிரகாஷை விட்டு விலக முடியாமல் தவிப்பு…

0
Follow on Google News

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ், தனது பள்ளிக்காலத்திலேயே சைந்தவியை பல வருடம் காதலித்து, பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கோலிவுட்டின் Favourite ஜோடியாக வலம் வந்த ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும், இதுவரை எந்த ஒரு சர்ச்சைகளிலும், கிசுகிசுப்புகளிலும் சிக்காமல் Best Pair ஆக இருந்தனர்.

ஆனால் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதியினர், திடீரென நாங்கள் பிரிந்து வாழ போவதாக கூறி விவாகரத்து செய்கிறோம் என்று அறிவித்தனர். முதலில் இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ், பிறகு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

அப்படி அவர் கொடுத்த ஹீரோ என்ட்ரி தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் ஹீரோவாக படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு ஜிவி பிரகாஷ், ஹீரோயின்களிடம் மிகவும் நெருக்கமாக நடிக்க ஆரம்பித்தது தான், குடும்பத்திற்குள் விரிசல்கள் ஏற்பட காரணமானது. குறிப்பாக அதேபோல் பேச்சுலர் படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து நடித்த திவ்ய பாராதியுடன் பலரும் கிசுகிசுக்கள் பேசினார்கள்.

இந்த படத்தில் இருவர் கெமிஸ்ட்ரியும் மிக அருமையாக வொர்க் அவுட் ஆகியதும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தது. மேலும் ஜிவி பிரகாஷும், சைந்தவியும், கடந்த இரண்டு வருடங்களாகவே ஒழுங்காக பேசிக் கொள்வதில்லை, அடிக்கடி சண்டை, Misunderstanding என வாழ்க்கையை ஓட்டி வந்ததால் தான் தற்போது விவாகரத்து செய்து கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக இருந்ததே ஜிவி பிரகாஷின் மாமியார் தான் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் ஜீவி பிரகாஷ் சம்பாதிக்கும் பணத்தை சைந்தவி, தனது தாய்க்கு கொடுத்து செலவு செய்து விடுகிறார். அது ஜிவி பிரகாசுக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. மேலும் முக்கியமாக தனது தாயின் கண்ட்ரோலில் ஜிவி பிரகாஷை, சைந்தவி கொண்டுவர முயற்சித்து இருக்கிறார்.

இதுவும் ஜி.விக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் தான் சுதந்திரமாக வாழ முடிவெடுத்து மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். அதேபோல் தான் தற்போதும் விவாகரத்து பெற்ற பின்பும் ஜீவனாம்சம் என ஒரு அமௌன்டை லம்ப்பாக சுருட்டி விட்டு சென்றார் என்ற தகவலும் வெளியாகியது. ஆனால் இப்படி பண விஷயத்தில் மோசமாக இருந்தாலும், சைந்தவிக்கு ஜிவி பிரகாஷ் மேல் அதிக அளவு காதல் இருக்கிறது என்றே பலரும் கூறினர்.

இந்நிலையில் இருவரும் பிரிவதற்கு முன் பாடிய பாடலும் இணையத்தில் ரிலீஸ் ஆகியது. அதேபோல் விவாகரத்துக்கு பின் வெற்றிமாறன் தனது படத்தின் ஒரு பாடலுக்காக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியை அழைத்து, ஒன்றாக பாடச் செய்தார். அப்போது விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி என்றும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில்தான் தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சைந்தவி, சமீபத்தில் ஜீ தமிழில் நடக்கும் சரிகமப என்ற இசை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்பதற்கு, அவர் அணிந்திருந்த Costume-ல் ஒரு போட்டோ எடுத்து, from the sets of சரிகமப என போஸ்ட் போட்டிருந்தார். அந்த போஸ்டை பார்த்து தான் ரசிகர்களே ஷாக் ஆகியுள்ளனர். ஏனெனில் விவாகரத்து முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும்,

தனது திருமணத்தின் போது ஜீவி பிரகாஷ் கட்டிய தாலியை இன்றுவரை சைந்தவி கழட்டாமல் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இவர் இன்னும், ஜிவி பிரகாஷை மறக்கவும் இல்லை, வெறுக்கவும் இல்லை, காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று ரசிகர்கள் உருக்கமாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.