கூண்டோட தர்ம அடி குடுங்க… நிம்மதியா மூச்சு விடுவோம்.. கோபத்தில் கொந்தளித்த சின்மயி..

0
Follow on Google News

தமிழ் சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகின்றவர் பின்னணி பாடகி சின்மயி. அதில் தனக்கு நடந்ததாக ஒரு சில சம்பவங்களையும் வெளியிட்டு பரப்பரப்பை ஏற்படுத்தி வருகின்றவர் சின்னமயி. அதில் வைரமுத்துவை அவருடைய அலுவலகத்தில் தனியாக சந்திக்க சென்ற போது, தன்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் வைரமுத்து நடந்து கொண்டதாக சில சம்பவங்களை இதற்கு முன்பு தெரிவித்து இருந்தார் சின்மயி.

தனக்கும் வைரமுத்து இடையிலான மோதல் காரணமாக வைரமுத்துவுக்கு ஆதரவாக டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி செயல்படுவதாக பகிரங்கமாக குற்றசாட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வரும் சின்மயி, தான் சினிமாவில் டப்பிங் பேச முடியதவாறு டப்பிங் யூனியனில் இருந்து நீக்கி விட்டார் என்று சின்மயி தெரிவித்து இருந்தார், இது குறித்து சமீபத்தில் ராதாரவி கலந்து கொண்ட நேர்காணலில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு எனக்கு என்ன இருக்கிறது? தனிப்பட்ட முறையில் எனக்கென்ன சின்மயி அத்தை பொண்ணா.? என தெரிவித்த ராதாரவி, அதெல்லாம் ஒரு கருமமும் கிடையாது, என்னிடம் வந்து அவருடைய அம்மா டப்பிங் யூனியனில் மெம்பராக சேர்க்கச் சொன்னார். நான் கையெழுத்து போட்டு சேர்த்தேன், அவ்வளவுதான். அத்துடன் முடிந்து விட்டது, மெம்பராக இல்லாதவர்கள் யாருக்காவது வாய்ஸ் கொடுத்தால் அதை நாங்கள் கேள்வி கேட்போம்.

இதற்காக சின்மயி வாய்ஸ் பேசவிடாமல் தடுக்கிறோம் என்பது அர்த்தம் அல்ல, இதுதான் ரூல்ஸ், எல்லாம் திமிரு, யூனியன் என்ன செய்யும் என்கின்ற திமிரு, பிறகு யூனியன் செய்ய வேண்டியது செய்தால் கேள்வி கேட்க வேண்டியது என ராதாவி பேசியதற்கு மிக கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார் பின்னனி பாடகி சின்மயி. அவர் இது குறித்து தெரிவிக்கையில், கட்டுன சந்தாவ கட்டலன்னு பொய் சொல்லி, ஒவ்வொரு வருடமும் டுப்பிங் யூனியன்ல இஷ்டத்துக்கு ராதாரவி கணக்க எழுதி வருவதாக தெரிவித்த சின்மயி.

மேலும் மீ-டூ வில், பாலியல் வழக்கு பதிவு ஆகியுள்ளது என இவரோட கவிஞர் நண்பன பத்தி சொன்னதால என்னை டாப்பிக் பேசுவதர்க்கு தடை விதித்தவர் ராதா ரவி என்றும், டப்பிங் யூனியன் கட்டிடத்துக்கு அப்ரூவல் வாங்க செலவு செய்ததாக கணக்கு எழுதி, இப்ப டப்பிங் கலைஞர்களோட காசுல விதிகள மீறி கட்டுன கட்டிடத்துக்கு மாநகராட்சி சீல் வெச்சாச்சு. நல்ல வேள இவருக்கு அத்த பொண்ணா இருக்கர சாபம் எனக்கில்ல. என தெரிவித்துள்ள சின்மயி.

இவருக்கு சரிங்க எசமான்னு சொல்லி வேலை பண்ணியே தீறணும்ன்ற தலையெழுத்துமில்ல. இவரை பேட்டி எடுத்தால் இவர் முகத்தை மட்டும் போடாமல் என் முகத்தை Thumbnailல எதுக்கு போடணும்? அந்த முகத்தையே போட்டு சம்பாதிக்க வேண்டியது தானே? சில பேரு ரேபிஸ்ட்ட பத்தி செய்தி சொலும்போது ரேப் ஆன பொண்ணோட செதஞ்ச உடல thumbnail போட்டாத்தான் விவ்ஸ் வரும்னு பண்ணுவாங்களாம். அப்ப TRP இப்ப views.

அப்யூஸ் செய்யப்பட்டவள் நான். தடை விதிக்கப்பட்டவள் ஆனவ நான். Court caseனு அலையுரவ நான். வைரமுத்து ஆனாலும் சரி ராதா ரவி ஆனாலும் சரி thumbnailல என் முகத்த போடலைன்னா என்ன? தூக்கம் வராதா?? இப்படியாப்பட்டவர்களை எல்லாம் வல்ல கர்த்தரே சொர்க்கத்திலிருக்கும் பரமபிதாவே தயவு செய்து ரட்சிக்க வேண்டாம். பாவிகளை மன்னித்தது போதும். கூண்டோட தர்ம அடி குடுங்க. நாங்க கொஞ்ச நாள் நிம்மதியா மூச்சு விடுவோம் என சின்மயில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.