வாடகை தாய் விவகாரம் சர்ச்சையில் சிக்கிய சின்மயி… ஆதாரத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..

0
Follow on Google News

நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்றதற்கு பின்பு, வாடகை தாய் விவகாரம் தமிழக முழுவதும் விவாத பொருளாக மாறி உள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்பு வரை, இந்த வாடகைத்தாய் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெருமளவு இல்லை. ஆனால் தற்பொழுது இது தொடர்பாக பல தகவல்களை மக்கள் ஆவலுடன் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

நயன்தாரா இரட்டை குழந்தை பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு பின்னணி பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். சின்மயி கர்ப்பமாக இருக்கிறார் என்கின்ற எந்த ஒரு செய்தியும் வெளிவராத சூழலில் திடீரென தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்ற சமூக வலைத்தளத்தில் சின்மயி பதிவு செய்தது, வாடகைக்கு தாய் மூலம் தான் குழந்தை பெற்றுள்ளார் என்கின்ற ஒரு தகவல் பரவலாக வெளியானது.

ஆனால் அதை முற்றிலுமாக சின்மயி தொடர்ந்து மறுத்து வந்தாலும் பலரும் சின்மையி தரப்பு வாதங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் சின்மயிக்கு பிறந்த இரட்டைக் குழந்தை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சின்மயி, மேலும் எனது தனிப்பட்ட வாழ்க்கை குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டம் ஆகியவற்றில் மிகவும் கவனமாக இருந்ததாக தெரிவித்த சின்மயி.

தனக்கு குழந்தை பிறக்கும்போது சிசேரியன் சமயத்தில் தான் பஜனை பாடலை பாடிக் கொண்டிருந்ததாகவும், இந்த ஒரு புகைப்படத்தை தவிர வேறு எந்த ஒரு புகைப்படமும் எடுக்கவில்லை என்றும் சின்மயி தெரிவித்துள்ளார். மேலும் தனது இரண்டு குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் வெளியிட்ட சின்மயி உலகில் மிகச்சிறந்த விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் நயன்தாரா போன்று வாடகை தாய் மூலம் தான் சின்மயி குழந்தை பெற்றார் என்கின்ற ஒரு தகவல்களுக்கு புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சின்மயி என்பது குறிப்பிடத்தக்கது

ஒன்றரை மாதத்தில் முடிவுக்கு வந்தது ரவீந்திரன் – மஹாலக்ஷ்மி திருமண வாழ்க்கை… இருவருக்கும் உச்சகட்ட சண்டை.