ஸ்டுடியோவில் இளையராஜா நடந்து கொண்ட விதம்…கண்கலங்கிய பிரபல பின்னணி பாடகி..

0
Follow on Google News

இளையராஜா இசையில் வெளியான மீரா திரைப்படத்தில் இடம்பெற்ற லவ்வுன்னா லவ்வு தான் மன்னனை ஸ்டவ்வு தான் என்கின்ற பாடல் மூலம் சினிமாவிற்கு பின்னணி பாடகியாக அறிமுகமானவர் மின்மினி, மேலும் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை என்கின்ற பாடலில் பாடலை பாடி பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார் பின்னணி பாடகி மின்மினி.

பிசியான பாடகியாக இருந்த காலகட்டத்திலே, தன்னுடைய குரல் உடைந்து விட்டதால் இனி பாடப்போவதில்லை என சினிமாவில் பாடல் பாடுவதை நிறுத்திக் கொண்ட மின்மினி சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பேட்டியில் முதல் முதலில் தன்னை சினிமாவில் பாடல் பாட அறிமுகப்படுத்தியது இளையராஜா தான் என தெரிவித்த மின்மினி.

இளையராஜாவை முதல் முதலில் சந்தித்து பாடல் பாடுவதற்கான வாய்ப்பு கேட்க மின்மினி சென்ற போது, உன் பெயர் என்ன என்று கேட்டுள்ளார் இளையராஜா அதற்கு மின்மினி என சொன்னதும், இப்படி எல்லாம் பெயர் வைப்பார்களா என கேட்ட இளையராஜா, அதன் பின்பு கர்நாடக இசை தெரியுமா என கேட்டுள்ளார், அதற்கு மின்மினி தெரியாது என்று சொன்னதும், சரி உனக்கு பிடித்த ஏதாவது ஒரு பாடலை பாடு என இளையராஜா கேட்டுள்ளார்.

அதற்கு மின்மினி ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்து விட்டது மீண்டும் இன்னொரு பாடலை பாடு என இளையராஜா கேட்க, மின்மினியும் இன்னொரு பாடலையும் பாடி காட்டியுள்ளார் மின்மினி. உடனே உனக்கு நிறைய இங்க வேலை உள்ளது இனி நீ கேரளாவுக்கெல்லாம் போக வேண்டாம் என இளையராஜா மின்மணியிடம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அந்த காலகட்டத்தில் கேரளாவில் அதிக கச்சேரி வாய்ப்புகள் மின்மினிக்கு இருந்ததால், சென்னையிலே தங்கி பாடல் பாட முடியுமா என்ற ஒரு தயக்கம் மின்மினிக்கு இருந்துள்ளது. ஆனால் அருகில் இருந்த மின்மினி தந்தை அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை சார், சென்னையிலே தங்கி பாடுவார் என என்று சொன்னதும் மீரா படத்தில் லவ்வுன்னா லவ்வு என்கின்ற பாடல் பாட மின்மினிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் பாடலை பாடிய பின்பு இளையராஜாவிடம் தொடர்ந்து மின்மினிக்கு பாடல் வாய்ப்பு வந்து கொண்டே இருந்துள்ளது. ஒரு நாளைக்கு 13 பாடல் வரை கூட இளையராஜா இசையில் பாடும் வாய்ப்பை பெற்று இருக்கிறார் மின்மினி. அதேபோன்று இளையராஜா மட்டுமின்றி மற்ற இசை அமைப்பாளர்கள் தேவா, எஸ்ஏ ராஜ்குமார் போன்றவர்களின் இசையிலும் பாடி வந்துள்ளார் மின்மினி.

இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையில் முதன்முதலாக வெளியான ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை என்ற பாடல் பாடும் வாய்ப்பைப் பெற்று பாடியுள்ளார் மின்மினி, இதற்கு முன்பு மின்மினி பல பாடல்களை பாடி இருந்தாலும், அத்தனை பாடல்களையும் தூக்கி சாப்பிடும் வகையில் சின்ன சின்ன ஆசை பாடல் பட்டி தொட்டி எங்கும் மின்மினியை புகழடையச் செய்தது. இந்த நிலையில் தாலாட்டு என்கின்ற படத்திற்காக ஒரு பாடலை பாட இளையராஜா ஸ்டூடியோ சென்றுள்ளார் மின்மினி.

வரெக்கார்டிங் ஸ்டூடியோவில் மின்மினி படுவதற்கு முன்பு, ஸ்டுடியோ உள்ளே வந்த இளையராஜ பாடலில் உள்ள சில திருத்தங்களை மின்மினியிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்ற இளையராஜா, மீண்டும் உள்ளே வந்து நீ எதற்கு அங்கே, இங்கே எல்லாம் பாட போகிறாய், என இளையராஜா தெரிவித்துள்ளார். அப்போது அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்த அனைவரும் இளையராஜா சொன்னதை கவனித்துள்ளார்கள்.

இதை கேட்ட உடனே கண்கலங்கிய மின்மினியை அருகில் இருந்த இருந்த மனோ அவரை சமாதானம் செய்துள்ளார். அதேபோன்று மற்ற இசை குழுவினரும் வந்து சமாதானம் செய்துள்ளார்கள். இந்த சம்பவத்தை மலையாள சேனலில் பேட்டி ஒன்றில் தெரிவித்த மின்மினி, இந்த சம்பவத்திற்கு பின்பு தன்னை இளையராஜா பாடல் பாடவே அழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.