ரஜினியை வசமா சிக்க வைத்த அனிரூத்… தப்பிக்க வழியின்றி தவிக்கும் ரஜினி..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா தம்பி மகன் அனிரூத் தொடர்ந்து அவரால் என்ன முடியுமோ அந்த அளவுக்கு ரஜினிகாந்த் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைக்கு காரணமாக இருந்து வருகிறார். தற்பொழுது ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுஷனை கடித்த கதை போன்று. தொடர்ந்து ரஜினிகாந்த் இரண்டு மகள்கள் குடும்பத்தில் பிரச்சனைக்கு காரணமாக இருந்து வந்த அனிரூத் தற்பொழுது ரஜினிகாந்தை மிக பெரிய சிக்கலில் சிக்க வைத்துள்ளார்.

ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா உடன் அனிருத் நெருங்கி பழகியது தனுஷ்க்கு பிடிக்காமல், பின் அனிரூத் – தனுஷ் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்தனர். அப்போது இருந்தே அனிரூத் மீது ரஜினிகாந்துக்கு கோபம் இருந்து வந்தது. பின் பீப் சாங் பிரச்சனையில் சிக்கிய பின்பு, வீட்டு பக்கமே வர கூடாது, குடும்பத்தினர் யாரும் அனிரூத் உடன் பேச கூடாது என ரஜினிகாந்த் உத்தரவு பிறப்பித்ததாக கூறப்பட்டது.

இதன் பின்பு ரஜினிகாந்த் மகள்கள் இருவரும் அப்பாவை சமாதனம் செய்து ஒரு வழியாக ரஜினி நடித்த பேட்ட, தர்பார் போன்ற படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்தனர். இயக்குனர் நெல்சன் மற்றும் அனிரூத் இருவரும் நெருக்கிய நண்பர்கள். நெல்சன் இயக்கிய முதல் படம் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனராக வாய்ப்பை பெற்று தந்தது அனிரூத் தான் என்று கூறப்படுகிறது, அதே போன்று அடுத்தடுத்து நெல்சனுக்கு இயக்குனர் வாய்ப்பை பெற்று தந்துள்ளார் அனிரூத்.

இந்நிலையில் அண்ணாத்தே படத்தை முடித்துவிட்டு புதிய படத்தின் கதை கேட்க்கும் வேலையில் தீவிரமாக இருந்தார் ரஜினிகாந்த். அதில் கே.எஸ்.ரவிக்குமார் அல்லது சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கலாம் என இவர்களின் இருவரின் கதையும் ரஜினிக்கு பிடித்து போனது. இதில் யாராவது ஒருவர் படத்தில் நடிக்கலாம் என ரஜினிகாந்த் முடிவு செய்திருந்த நிலையில். அனிரூத் ஏற்பாட்டில் ரஜினிகாந்த் இரண்டு மகள்களின் சிபாரிசில் நெல்சன் கதை சொல்ல ரஜினியிடம் சென்று இருக்கிறார்.

அனிரூத் மீது அதிக அளவு கடந்த பாசம் கொண்டவர்கள் ரஜினிகாந்த் இரண்டு மகள்களும், அந்த வகையில் நெல்சன் கதையை எப்படியாவது ஓகே பண்ணுங்க என ரஜினி மகள்களிடம் அனிரூத் நச்சரிக்க, இரண்டு மகள்களும். நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான டாக்டர் படம் மிக பெரிய வெற்றி, தற்பொழுது விஜய்யை வைத்து படம் இயக்கி வருகிறார் அதுவும் உறுதியா ஹிட் அடிக்கும். அதனால் நெல்சன் கதையை தேர்தெடுத்து நடிக்க வேண்டும் என மகள்கள் இருவரும் தந்தை ரஜினிகாந்தை கண்வைன்ஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பின்பு ரஜினிகாந்த் புதிய படத்தில் நெல்சன் உறுதி செய்யப்பட்டு, இந்த படத்தை சன் பிக்சர் தயாரிப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியுள்ளது. மேலும் இந்த படத்தை பார்த்து செம்ம கடுப்பில் ரஜினிகாந்த் உள்ளதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து , இரண்டு மகள்களிடம் என்ன படம் எடுத்து வெச்சுருக்கார் நெல்சன்.

இவரை நம்பி எப்படி அடுத்த படத்தில் நடிப்பது என கேட்க. அனிரூத் தான் சிபாரிசு செய்தார் என இளைய மகள் அனிரூத்தை மாட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை நெல்சனிடம் வசமாக சிக்க வைத்த அனிரூத் மீது செம்ம டென்ஷனில் இருக்கும் ரஜினிகாந்த் தனது புதிய படத்தின் இயக்குனரை மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தயாரிப்பு நிறுவனமும் இயக்குனர் நெல்சன் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் படு மொக்கை… கதறும் விஜய் ரசிகர்கள்..! நெல்சன் இப்படியா விஜய் அண்ணாவ வெச்சு செய்வார்.!