குழப்பத்தை ஏற்படுத்திய அனிருத்…. ஜவான் படம் வெளியாவதில் சிக்கல்…

0
Follow on Google News

இந்தியில் நடிகர் ஷாருகான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கின் காரணமாக கைது செய்யப்பட்டார். இதனால் சில நாட்கள் ஷாருக்கானால் படப்பிடிப்பில் பங்கேற்க்க முடியவில்லை. மேலும் கொரோனா தொற்றின் காரணமாக ஜவான் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இப்படி பல தடைகளை சந்தித்த படம் ஜவான்.

இந்நிலையில் மும்பையில் முதல் கட்ட படப்பிடிப்பு ஷாருக்கான் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா திருமணம் முடிந்த அடுத்த ஒரு மாதத்தில் மும்பையில் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.ஜவான் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியை என்ட்ரி கொடுக்க வைத்தார் அட்லி. இது இந்தி சினிமாவில் விஜய் சேதுபதிக்கு மிக பெரிய வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஜவான் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது, இதில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. நடிகை தீபிகா படுகோனும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஜவான் படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ள நிலையில், படத்தின் இதர வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் மாதம் ஜவான் படம் திரைக்கும் வரும் என எதிர்ப்பார்க்க பட்ட நிலையில், தற்பொழுது குறிப்பிட்ட தேதியில் ஜவான் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எதற்கு காரணம் ஜவான் படத்தில் இசை அமைப்பாளராக கமிட்டாகி யுள்ள அனிருத் கைவசம் அதிக படம் உள்ளதால், அவரால் குறிப்பிட்ட தேதிக்குள் ஜவான் படத்திற்கு இசை அமைக்க முடியவில்லை, இதனால் மேலும் காலஅவகாசம் கேட்டுள்ளார் அநிருத்த, இதனை தொடர்ந்து அனிருத் தாமதத்தினால் ஆக்டொபர் மாதம் தான் ஜவான் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.