என்னை நம்ப வைத்து ஏமாற்றிய அனிரூத்… கதறி ஆளும் கீர்த்தி சுரேஷ்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா அவர்களின் நெருங்கிய உறவினர் வீட்டு பையன் இசை அமைப்பாளர் அனிரூத், இதுவரை எந்த ஒரு இசை அமைப்பாளரும் பெரும்பாலும் நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்க மாட்டார்கள், ஆனால் அனிரூத் மற்ற இசையமைப்பளர்களை விட சற்று மாறுபட்டவர், தொடர்ந்து பல்வேறு நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வருகின்றவர், மேலும் இரவு பார்ட்டியில் கலந்து கொள்வது, மது அருந்தும் பழக்கமும் அனிருத்துக்கு உண்டு என்று கூறப்படுகிறது.

ஆரம்ப கட்டத்தில் பின்னணி பாடகி ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருந்த அனிரூத் , இவர்கள் தனிமையில் இருக்கும் புகைப்படம் வெளியானது, மேலும் இருவரும் காதலிப்பதாக கூட தகவல் வெளியானது, ஆனால் ஆண்ட்ரியா தன்னை விட வயதில் மூத்தவர் என்கிற காரணத்தால் இவர்களின் காதல் தோல்வியை தழுவியதாகவும், இருவருக்கும் செட் ஆகாது என ஒருமனதாக முடிவு செய்து இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் இரண்டு மகள்களுடன் நெருங்கி பழக கூடிய அனிருத், மூத்த மகள் ஐஸ்வர்யா உடன் கிசு கிசுவில் சிக்கினார், ஐஸ்வர்யா முறை பெண் என்பதால் அனிருத் சிறுவயதில் இருந்தே இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ் – அனிருத் இடையில் பிரச்சனை ஏற்பட்டு அது மோதலாக வெடித்து அனிருத் – தனுஷ் இருவரும் பிரிவதற்கான காரணமாக கூட அமைத்தது என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருங்கி பழகி வந்த அனிருத் இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சுற்றி வந்துள்ளார்கள், மேலும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட இந்த ஜோடி, ஒரே காரில் திரும்பி சென்றுள்ளார்கள். அனிரூத் ஒல்லியாக இருப்பதால், அவருடைய உடலுக்கு தகுந்தார் போல தன்னுடைய உடல் இடையையும் கீர்த்தி சுரேஷ் உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மாக குறைத்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அனிரூத் – கீர்த்தி சுரேஷ் இருவரும் காதலித்து வருவதாகவும், மேலும் அனிருத் ஒருபக்கம் சினிமாவில் பிசியாக இருந்தாலும், மறுபக்கம் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதனால் விரைவில் அனிருத் – கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு அனிருத் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பெற்றோர்களுடன் இது குறித்து பேசியுள்ளார் அனிரூத், ஆனால் பெற்றோர்கள் அனிரூத் மனதை மாற்றி விட்டார்கள் என்றும், நம்ம குடும்பத்துக்கு சினிமா நடிகை செட் ஆகாது. அதனால் நாங்க உனக்கு பெண் பார்த்து வருகிறோம், விரைவில் எல்லாம் நல்லதே நடக்கும் என பெற்றோர்கள் அறிவுரையை ஏற்றுள்ளார் அனிரூத். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் காதலை முறித்து கொண்டு பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அனிருத் தனக்கு கல்தா கொடுத்துவிட்டு பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பது குறித்து தனக்கு நெருங்கிய தோழிகளிடம், என்னை நம்ப வைத்து அனிருத் ஏமாற்றி விட்டார் என கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார் கீர்த்தி சுரேஷ் என்று கூறப்படுகிறது.

அம்மா ப்ளீஸ் வேண்டாம்…. கையை பிடித்து கதறிய இரண்டு மகன்கள்… தாய் ஐஸ்வர்யா என்ன செய்தார் தெரியுமா.?