தனுஷ்- ஐஸ்வர்யா வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய அனிருத், சிவகார்த்திகேயன்.! தனுசுக்கு துரோகம் செய்யலாமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்து சுமார் 20 நாட்களான நிலையில், இவர்கள் மீண்டும் இணைவதற்கான சாத்திய கூறுகள் பிரகாசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, அதற்கான முயற்சியில் ஈடுபட்ட இரண்டு குடுப்பதினர் முயற்சிகள் ஓரளவு வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இடையே அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சடுகுடு விளையாடிய சம்பவம் ஓன்று வெளியாகி உள்ளது.

நடிகர் சிலம்பரசன் விஜய் தொலைக்காட்சியில் நடித்து கொண்டிருந்த நடிகர் சந்தானத்தை தனது திரைப்படத்தில் அறிமுகம் செய்து சினிமாவில் வாய்ப்பளித்தார், சந்தானமும் முன்னணி நடிகரானார், ஆனால் சந்தானம் இந்த நிலைக்கு காரணம் சிம்பு தான் என மீடியாக்கள் சிம்புவை கொண்டாடினார்கள். இதே போன்று பலருக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர் தனுஷ் என தன்னை சினிமா உலகம் கொண்டாட வேண்டும் என முடிவு செய்தார் தனுஷ்.

இதனை தொடர்ந்து தனது சொந்த தயாரிப்பில், இசைமைப்பாளரான அனிருத்க்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வந்தார், அதே போன்று 3 படத்தில் காமடி நடிகனாக சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுத்த தனுஷ், அடுத்து தனது சொந்த தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக சிவகார்திகேயனுக்கு வாய்ப்புகள் வழங்கினார், இதனை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன், மற்றும் அனிருத் ஆகியோர் ஒரு கூட்டணியாக சினிமா வட்டாரத்தில் பார்க்க பட்டனர்.

இந்த கூட்டணி ஒன்றாக இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதும், நட்சத்திர நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக செல்வது என தொடர்ந்து. இந்நிலையில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும், தனுஷை விட அவரது மனைவி ஐஸ்வர்யாவிடம் அதிக நெருக்கமான நபர்களாக பழகி வந்துள்ளனர். இதன் பின்பு தான் நன்றாக சென்று கொண்டிருந்த தனுஷ் – ஐஸ்வர்யா வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கு இடையே பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது.

அதாவது, தனுஷ் இரவு பார்ட்டியில் எந்தந்த நடிகைகளுடன் கலந்து கொள்கிறார், சக நடிகைகளுடன் என்னென்ன சேட்டைகள் செய்கிறார் தனுஷ் என்கிற தகவலை ஐஸ்வர்யாவிடம் போட்டு கொடுத்து அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் தனுஷ் – ஐஸ்வர்யா இடையே சடுகுடு விளையாட்டு விளையாடியுள்ளனர், இதனை தொடர்ந்து இதன் பின்பு தான் தனுஷ் மீது ஐஸ்வர்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு தொடர்ந்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து என் கூடவே இருந்து எனக்கே துரோகம் செய்கிறீர்களா. என கோபத்தின் உச்சிக்கே சென்ற தனுஷ் முதலில் சிவகார்த்திகேயன் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசுவதை நிறுத்தி யுள்ளார், அதன் பின்பு அனிரூத்திடன் சண்டையிட்டு பிரிந்துள்ளனர். இந்நிலையில் இன்று தனுஷ் – ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட உச்சக்கட்ட பிரச்சனையால் இருவரும் பிரிவதற்கு ஆரம்பமே சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் போட்ட விதை தான் என கூறப்படுவது குறிப்பிடதக்கது.