பீஸ் கட்ட முடியாமல் பிளாட்பாரத்தில் மாணவி… கடவுள் போல் தோன்றிய KPY பாலா..

0
Follow on Google News

தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் என்ற பழமொழியை மாற்றி, தன்னிடம் வரும் சிறிய அளவு பணத்தையும், கர்ணன் போல் வாரி வழங்கி, ஏழைகளின் கண்களுக்கு கர்ணன் ஆகவும், அன்னை தெரசாவாகவும் தெரிபவர் தான் KPY பாலா. இவர் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, தற்போது, இரவு பகலாக நடித்து, அதில், தான் சம்பாதிக்கும் பணத்தை, கஷ்டப்படுபவர்களுக்கும், தன்னிடம் உதவி என கேட்டு வருபவர்களுக்கும், கணக்குப் பார்க்காமல் உதவி செய்து வருகிறார்.

இதனால் பாலாவை அவரது ரசிகர்கள் வள்ளல் பாலா என்றும் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது பிளாட் பார்மில் வாழும் ஒரு மாணவிக்கு, கடவுளாக மாறி, பாலா செய்த செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது. ஒரு சில நடிகர்கள் பொதுமக்களிடம் கொஞ்சம் பிரபலமாகிவிட்டால், உடனே youtube சேனல் தொடங்கி வீடியோக்கள் போட்டு விளம்பரம் செய்து சம்பாதித்து கொண்டிருக்கின்றனர்.

அதுபோல் பலர் சினிமாக்களில் மட்டும் தான் ஹீரோயிசம் காட்டிக் கொண்டிருக்கின்றனர், நிஜ வாழ்க்கையில் ஜீரோ தான். ஆனால் விஜய் டிவியின் KPY பாலா, பிறருக்கு செய்யும் உதவிகளுக்கு அளவே இல்லை. முதலில் வெட்டுக்கிளி பாலா என்று கலாய்க்கப்பட்டு வந்த இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டதன் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதற்குப் பிறகு தான் அவர் வாங்கும் சம்பள பணத்தில், பல ஆதரவற்றவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் கல்லூரி மாணவி ஒருவர் ஏழ்மையின் காரணமாக தனது தாயார் உடன் பிளாட்பாரத்தில் வசித்து வந்துள்ளார். அந்த மாணவி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரால் பீஸ் கட்ட முடியாததால், கல்லூரி நிறுவனம் கட்டணம் கட்டினால் தான் அனுமதிப்போம் என கூறியிருக்கிறது.

இதனால் அந்த மாணவி தன் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்நிலையில் தான் இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற பழ மொழிக்கு ஏற்ப, பிளாட் பாரத்தில் வசிக்கும் ஒரு மாணவி படிக்க பணம் இல்லாமல் தவிக்கிறார் என்பதை அறிந்த பாலா, அந்த கல்லூரி மாணவிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவர் தங்கியிருந்த பிளாட்பாரத்திற்கே நேரில் சென்றுள்ளார்.

நேரில் சென்று அந்த மாணவியின் காலேஜ் சர்ட்டிபிகேட், கட்டண பில் அனைத்தையும் வாங்கி, அந்த மாணவி கல்லூரியில் செலுத்த வேண்டிய முழு பணத்தையும் கொடுத்திருக்கிறார். இதனால் ஷாக் ஆன அந்த மாணவியும், அவரது தாயாரும் கண்கலங்கி பாலாவுக்கு நன்றி கூறினர்‌. இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததையடுத்து தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி பலரும் பாலாவை வாழ்த்தி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து தருவது, அதே போல் விவசாயிகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுப்பது, படிப்பதற்கு பணம் இல்லாமல் தவிக்கும் மாணவர்களை படிக்க வைப்பது, சில ஏழை நபர்களின் கனவுகளை நிறைவேற்றுவது என எண்ணில் அடங்காத உதவிகளை தொடர்ந்து செய்து வரும் இவர், தற்போது ராகவா லாரன்ஸின் மாற்றம் என்ற சேவையிலும் இணைந்துள்ளார்.

அதாவது ராகவா லாரன்ஸ் செய்த உதவிகளுக்கும் அளவே இல்லை, நடிகர் லாரன்ஸ் திரைத்துறையில் மட்டும் பணியாற்றாமல் பல ஆசிரமங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், தனி தனியாக சேவை செய்த இருவரும் தற்போது இணைந்து பல உதவிகளை செய்து வருவதை மக்கள் பலரும் மனதார பாராட்டி வருகின்றனர்.