kpy பாலா – லாரன்ஸ் உதவி செய்வதின் பின்னணியில் இப்படி ஒரு திட்டமா.? இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது.?

0
Follow on Google News

தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் என்ற பழமொழியை மாற்றி, தன்னிடம் வரும் பணத்தை வாரி வழங்கும் கர்ணனாகவும், அன்னை தெரசா போலவும், அனைவர் கண்களுக்கும் தெரிபவர் தான் KPY பாலா மற்றும் ராகவா லாரன்ஸ். தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்யும் பாலாவை அவரது ரசிகர்கள் வள்ளல் பாலா என்றும் அழைத்து வருகின்றனர்.

பாலா விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானதோடு, அதே நிகழ்ச்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர், சமீப காலமாக கஷ்டப்படுபவர்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார்.

இப்படி பல உதவிகளை செய்து வரும் பாலாவின் தன்னலமற்ற சேவையை பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் , இனிமேல் அவர் செய்யும் அனைத்து நலத்திட்டங்களிலும் நான் பங்களிப்பாக இருப்பேன் என்றும் கூறியிருந்தார். அந்த வகையில், KPY பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து, மாற்றம் என்ற சேவை அறக்கட்டளையை தொடங்கி எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மாற்றம் சேவை மூலமாக KPY பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் செய்யும் உதவிகளுக்கு ஒரு பக்கம், பாராட்டு வந்தாலும் மறுபக்கம் விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து தான் அளவுக்கு மீறி உதவி செய்து வரும் பாலாவுக்கு பணம் எப்படி வருகிறது என்றும் , அவர் இவ்வாறு உதவி செய்வதற்கு பின்னால் முக்கிய காரணமும் இருக்கிறது என்ற பகீர் தகவலை சினிமா சார்ந்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.

KPY பாலா கருப்பு பணத்தை மாற்றவே இப்படி உதவி செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதோடு மட்டுமல்லாமல் ராகவா லாரன்ஸ், அரசுக்கு வரி கட்டாமல் தப்பிப்பதற்காக தான் இப்படி உதவி செய்கிறார் எனவும் கூறப்படுகிறது. அதாவது, மாதம் 10 லட்சம் ரூபாய் அவர் சம்பாதித்தால், அதில் எட்டு லட்சத்திற்கு மட்டும் அவர் வரி கட்டுவார், மீதமுள்ள 2 லட்சத்தை மக்களுக்கு உதவி செய்கிறேன் என கூறிவிட்டு,

அதில் ஒரு லட்சத்தை மட்டும் உதவி செய்துவிட்டு, மீதமுள்ள ஒரு லட்சத்தை அவரே வைத்துக் கொள்வார். இப்படித்தான் தான் சம்பாதிப்பதில் இருந்து அரசுக்கு வரி கட்டாமல் தப்பிப்பதற்காக போடும் நாடகம்தான் இந்த உதவி செய்யும் நாடகம் என்றும். மேலும் அதே போல்தான் KPY பாலாவும் அவர் ஒரு இடத்திற்கு உதவி செய்யப் போவதற்கு முன் பத்து நியூஸ் சேனல்களிடம் சொல்லி, பிறகு அவர்களையும் கையோடு கூட்டிக் கொண்டே தான் செல்வார்.

இப்படி அவர் உதவி செய்வதற்கான காரணமே விளம்பரம் மோகத்தில் தான் என்றும், அவர் ஹீரோவாக இனி திரைப்படங்களில் நடிக்க உள்ளதால், மக்கள் தன் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் இப்படி செய்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் பாலா உதவி செய்யும் பணம் எல்லாம் கருப்பு பணம் என்றும், கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற தான் இப்படி செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் பாலாவும், என்னால் முடிந்ததை சம்பாதித்து மற்றவர்களுக்கு நான் உதவி செய்கிறேன், ஆனால் பலர் என் பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்றும், யாருடைய கருப்பு பணத்தையோ நான் வெள்ளை பணமாக மாற்றுகிறேன் என்றும் சொன்னீர்கள், அது கருப்பு பணம் இல்லை, வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தான் ராகவா லாரன்ஸ் மற்றும் கே பி ஒய் பாலா மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் கூட கஷ்டப்படும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இவர்கள் செய்யும் இந்த செயல்கள் பாராட்டத்தக்கது என்றும் பலரால் கூறப்படுகிறது.