ஆர்த்தி சொல்வதெல்லாம் பொய்… இரண்டு மகன்கள் முடிவு இது தான்.!

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவிப்பு வெளியான பின்பு பலரும் ஜெயம் ரவிக்கு ஆதரவாகவும், ஆர்த்திக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதற்கு காரணம் ஜெயம் ரவி இது வரை சினிமாவில் எந்த ஒரு நடிகையுடன் கிசு கிசுவில் சிக்க வில்லை. குறிப்பாக அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருக்க கூடியவர் ஜெயம் ரவி, அந்த வகையில் சினிமாவில் நெகடிவ் விமர்சனம் 1 சதவிகிதம் கூட இல்லாத நடிகர் என்றால் அது ஜெயம் ரவி என்று சொல்லலாம்.

ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதற்கு காரணம் அவருடைய மனைவியின் சந்தேக குணம், மற்றும் மம்மியாரின் டார்ச்சர் என கூறப்பட்ட நிலையில் பலரும் ஜெயம் ரவிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் இது தொடர்பாக ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், கணவர் ஜெயம் ரவி என்னை விட்டு பிரிவது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

ஆர்த்தியின் இந்த அறிக்கையை பார்த்த பலருக்கும் குழப்பம் நீடித்து வந்த நிலையில், கோவாவில் உள்ள ஒரு பாடகிய உடன் ஜெயம் ரவியை தொடர்புபடுத்தி வெளியான செய்திகளுக்கு பின்பு பலரும் ஆர்த்திக்கு ஆதரவாகவும் ஜெயம் ரவிக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதாவது ஆர்த்தி ஜெயம் ரவி மீது சந்தேகம் அடைந்தது சரி தான் என்றும், மனைவி ஆர்த்திக்கு ஜெயம் ரவி துரோகம் செய்து விட்டார் என பலரும் ஜெயம் ரவிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.

இப்படி ஜெயம் ரவிக்கு ஆதரவாக இருந்த ஒரு அலையை அப்படியே அவருக்கு எதிராக மெல்ல மாற்றியதன் பின்னணியில் ஜெயம் ரவி மனைவி மீது ஏற்படுத்தப்பட்ட அனுதாபம்தான், ஆனால் முழுக்க முழுக்க ஜெயம் ரவி தரப்பிலிருந்து ஆர்த்தி வடிப்பது நீலி கண்ணீர் என்று தெரிவித்த விளக்கம் கொடுத்துள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது மனைவி ஆர்த்தி அறிக்கை குறித்து ஜெயம் ரவியிடம் சினிமா துறையை சேர்ந்த ஒருவர் கேட்டதற்கு பல தகவலை ஜெயம் ரவி அவரிடம் பகிர்ந்துள்ளார். அதில்ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு ஆர்த்தியிடம் எதுவும் கலந்த ஆலோசிக்கவில்லை என ஆர்த்தி கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்றும், அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு இரண்டு முறை ஜெயம் ரவி ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும்.

மேலும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்பு ஆர்த்தியின் தந்தையார் ஜெயம் ரவி வீட்டிற்கு சென்று ஜெயம் ரவி தந்தையாரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அந்த பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றும் ஜெயம் ரவி தரப்பிலிருந்து கூறப்படுகிறது. மேலும் ஆர்த்தி தரப்பிலிருந்து தானும் தன்னுடைய இரண்டு மகன்களும் ஜெயம் ரவியை தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு தவித்து வருகிறோம் என்பது போன்ற தன்னுடைய அறிக்கையில் இடம் பெற்றிருந்ததத்து.

இதற்கு ஜெயம் ரவி தரப்பில் முற்றிலும் தவறான தகவல் இது என்றும், தன்னுடைய இரண்டு மகன்களுடன் அடிக்கடி சந்தித்து நேரம் செலவு செய்து தான் வருகிறேன் என தெரிவித்த ஜெயம் ரவி, மகனின் பிறந்தநாளை தன்னுடைய இரண்டு மகன்களுடன் கோலாகலமாக சந்தோசமாக கொண்டாடியதாக தெரிவித்த ஜெயம் ரவி, குறிப்பாக என்னுடைய மகன்கள் என்னை சந்திக்க முடியாதபடி எங்கே இருக்கேன் என்று கூட தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் பொய் என ஜெயம் ரவி சினிமா துறையை சேர்ந்த அந்த நபரிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here