தனுஷ் பாமுலாவை கையில் எடுத்த ஜெயம் ரவி… மனைவி ஆர்த்தியை விட்டு நிரந்தரமாக பிரிய யார் காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆரத்தியை விட்டு பிரிந்து விரைவில் விவாகரத்து பெற இருக்கிறார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், ஜெயம் ரவி தரப்பிலும் ஆரத்தி தரப்பிலும் எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் அமைதியாக இருந்து வந்தனர். இதனால் கிட்டத்தட்ட ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி இருவரும் நிச்சயம் பிரிவார்கள் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சினிமா பார்வையாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய மனைவி ஆர்த்தியை விட்டு ஒரு மனதாக பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. மேலும் மனைவி ஆரத்திக்கும் ஜெயம் ரவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜெயம் ரவி மனைவியை விட்டு பிரிந்து விட வேண்டும் என்று முடிவு செய்தபோது, இதை சற்றும் ஜெயம் ரவி மனைவி எதிர்பார்க்கவில்லை என்றும், காரணம் இதற்கு முன்பு வரை மனைவி என்ன சொன்னாலும் ஜெயம் ரவி தலையாட்டி பொம்மை போன்று இருந்துள்ளார்.

முழுக்க முழுக்க மாமியார் மற்றும் மனைவி கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளார் ஜெயம் ரவி. ஒரு கட்டத்தில் இவர்களின் கட்டுப்பாடுகள் எல்லை மீறி சென்றதைத் தொடர்ந்து பொறுமைய இழந்த ஜெயம் ரவி விவாகரத்து செய்ய முடிவெடுத்தது ஆரத்திக்கு அதிர்ச்சியை கொடுத்தது இருந்தாலும், ஆரத்தி ஜெயம் ரவியுடன் இணைந்து வாழவே முடிவு செய்து பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது, அந்த வகையில் ஆரத்தி குடும்பத்திற்கு மிக நெருக்கமான நடிகை குஷ்பும் , ஆரத்தி மற்றும் ஜெயம் ரவி இருவரையும் மீண்டும் இணைத்து வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் தழுவியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி சில கண்டிஷன் போட்டு குழந்தைகளுக்காக ஆரத்தியுடன் மீண்டும் இணைந்து வாழலாம் என்கின்ற கடைசி வாய்ப்பை தன்னுடைய மனைவி ஆர்த்திக்கு கொடுத்துள்ளார். அதாவது நம்மளுடைய குடும்ப விவரங்களில் ஆர்த்தி அம்மா தலையிடக்கூடாது என, இது போன்ற சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் ஜெயம் ரவி.

ஆனால், என் அம்மாவை விட்டு விலகி, அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவை இல்லை என்கின்ற முடிவுக்கு வந்த ஆரத்தி, ஜெயம் ரவி கண்டிஷனை ஏற்க மறுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தொடர்ந்து ஆரத்தியும் கணவர் ஜெயம் ரவியை விட்டு பிரிந்து விடலாம் என்கின்ற முடிவுக்கு வந்துள்ளார். இப்படி இருவரிடமும் நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தைகளும் தொடர் தோல்வியை சந்தித்து தனுஷ் பார்முலாவை கையில் எடுத்துள்ளார் ஜெயம் ரவி.

ஆம் நடிகர் தனுஷ் எப்படி திடீரென்று ஒரு அறிக்கையை வெளியிட்டு நானும் என்னுடைய மனைவி ஐஸ்வர்யாவும் பிரிவதாக ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளோம் என்று, தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவை பற்றி இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்தினார்களோ.! அதே பார்முலாவை கையில் எடுத்த ஜெயம் ரவி ஒரு ஏ போர் பேப்பர் அறிக்கை மூலம் தானும் தன்னுடைய மனைவி ஆர்த்தியும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த இந்த நிலையில் ஜெயம் ரவியும் அவருடைய மனைவியும் விவாகரத்துக்கோரி நீதிமன்றம் செல்வார்களா.? அல்லது தனுஷ் ஐஸ்வர்யா போன்று சட்டப்படி விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழ்வார்களா.? என்பதை இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும் என்கின்றது சினிமா வட்டாரங்கள், குறிப்பாக தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு பின்பு தொடர்ந்து சினிமா துறையை சேர்ந்தவர்கள் விவாகரத்து பெற்று வருவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here