அந்த நடிகருடன் எல்லை மீறிய ஐஸ்வர்யா ராய்… விவகாரத்து காரணம் இது தானா.?

0
Follow on Google News

சமீப காலமாகவே திரையுலகில் நட்சத்திர தம்பதிகளுக்கிடையே தொடர்ந்து கருத்துவேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து செய்யும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகிறது. இந்த லிஸ்ட்டில் தான் தற்போது ஐஸ்வர்யா ராய் -அபிஷேக் பச்சனும் இணைந்திருக்கின்றனர். பாலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், தன்னுடைய காதல் கணவர் அபிஷேக் பச்சனை பிரியவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஐஸ்வர்யா ராய் தனது மாமனார் மற்றும் மாமியாரை மதிக்காமல், அவர்களை மீறி, சில விஷயத்தை செய்தது தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் திருமணத்திற்கு முன் ஜெயப்பச்சனுக்கு, அமிதாபச்சன் போட்ட ஒரு கண்டிஷனை ஐஸ்வர்யா ராய் தற்போது பின்பற்றாமல் இருப்பதும், ஒரு முக்கிய காரணம் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

பிளாக் அண்ட் ஒயிட் காலம் தொடங்கி தற்போதைய காலம் வரையிலும் திரையுலகில் முன்னணி நடிகராக அமிதாப்பச்சன் வலம் வருகிறார். இவர் 1970 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஜெயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் முதன்முறையாக திருமணத்திற்கு முன் அமிதாப்பச்சன் போட்ட கண்டிஷன் பற்றி ஜெயா பச்சன் மனம் திறந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் காதலர்களாக இருந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது, அமிதாப் பச்சன், திருமணத்திற்குப் பின் தனது மனைவி எப்போதும் போல் ஒன்பது முதல் 5:00 மணி வரையிலான வேலைக்கு செல்வதை விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார். மேலும் ஜெயா பச்சன் எந்தெந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பதையும் அமிதாப்பச்சன் தான் முடிவு செய்துவிட்டு, நன்கு அறிந்த நபர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்ற வேண்டும் என கண்டிஷனும் போட்டிருக்கிறார்.

பிறகு ஜெயா பச்சன் படங்களில் நடிப்பதையே கைவிட்டுவிட்டு தன் குடும்பத்தை தான் கவனித்து வருகிறார். இந்நிலையில்தான் தற்போதும் இதே காரணத்திற்காக தான் அபிஷேக் பச்சனுக்கும்- ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருக்கிறது என சொல்லப்படுகிறது. 2007 இல் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு திருமணமான பிறகும், இன்றுவரை பல படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துக் கொண்டே தான் இருக்கிறார்.

மாமியார் மாமனார் படங்களில் நடிக்க வேண்டாம் என சொல்லியும், அவர்கள் பேச்சை கேட்காமல் படத்தில் நடித்து வருவதால் தான் தங்கள் குடும்பத்தில் கடைபிடிக்கப்பட்ட இந்த கண்டிஷனை ஐஸ்வர்யா ராய் மீறியதே இந்த விரிசலுக்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் ஐஸ்வர்யா ராயை படத்தில் நடிக்க கூடாது என மீண்டும் குடும்பத்தினர் ஸ்ட்ரிக்டாக சொன்ன போதும், இவர் அதையும் மீறி நடித்ததோடு, ஓவர் கிளேமராகவும், ஹீரோக்களுடன் மிகவும் நெருக்கமாகவும் நடித்து வருகிறார்.

குறிப்பாக சமீபத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து ஏ தில் ஹை முஸ்கின் என்ற படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்தது குடும்பத்திற்குள் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியிருந்தது. மேலும் ரன்பீர் கபூருடன் இணைந்து ஐஸ்வர்யா ராய் எல்லை மீறி கவர்ச்சியில் நடித்த வீடியோ மிக பெரிய அளவில் வைரலாகி இது அமிதாப் பச்சனுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததுள்ளது. இந்நிலையில் தான் ஒட்டுமொத்த குடும்பமும் தனது நடிப்புக்கு எதிராக இருப்பதால் குடும்பத்தை உதறி தள்ளிவிட்டு தற்போது ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனியாக இருப்பதாகவும்,

இதனால் தான் தன் கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் மாமனார் மாமியார் எவ்வளவு சொல்லியும் அபிஷேக் பச்சனின் குடும்பத்தை மதிக்காமல் ஐஸ்வர்யா ராய் படத்தில் நடித்ததே விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்றும் தெரியவந்துள்ளது.