இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா ரம்யா பாண்டியன்?: படக்குழு வெளியிட்ட தகவல்

0
Follow on Google News

‘ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதன்பிறகு விஜய் டிவியில் இடம்பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்களை அள்ளினார்.

இதன்பிறகு இவர் நடிப்பில் ‘ஆண் தேவதை’ என்ற படம் வெளியானது. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், தற்போது ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘இடும்பன்காரி’ என்ற படம் உருவாகவிருக்கிறது.

புதுமுக இயக்குனர் அருள் அஜித் என்பவர் இயக்குகிறார். துப்பறியும் திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் இவருடன் ஷிவதா குமார், அனுபமா குமார், ‘நீயா நானா’ கோபிநாத், இயக்குனர் வேலு பிரபாகரன், அருண் மற்றும் ஜோதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சிவிகுமார் தனது திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்தில் ஷிவதா குமாரும், ரம்யா பாண்டியனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அமீன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். அருண் ராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் அளவிற்கு பரபரப்பான துப்பறியும் திரில்லராக ‘இடும்பன்காரி’ படம் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் மட்டுமில்லாது ரம்யா பாண்டியன் நடிகர் சூர்யா தயாரிக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.