அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்…. இமான் கையில் வலுவான ஆதாரங்கள்…

0
Follow on Google News

சினிமாவில் ஒரு நடிகரின் வெற்றிக்கு மக்கள் மத்தியில் அந்த நடிகருக்கும் இருக்கும் இமேஜ் என்பது மிக மிக முக்கியம். உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் தன்னுடைய இமேஜை எந்த ஒரு இடத்திலையும் பாதிப்படை விடாமல் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும், ஏதோ ஒரு வகையில் ஒரு நடிகர் தன்னுடைய இமேஜ் பாதிப்பு அடையும் பட்சத்தில் அந்த நடிகரின் படம் மக்களால் புறக்கணிக்கும் போது மிகப்பெரிய தோல்வியை சந்தித்து அந்த நடிகர் சினிமாவில் காணாமல் போய் விடுவார்.

குறிப்பாக பொதுமக்களிடம் ஒரு நடிகர் தன்னுடைய இமேஜை இழந்து விட்டால் திரும்பவும் சினிமாவில் நிலைத்து நிற்பது தலைகீழா நின்றாலும் கூட முடியாது. அந்த வகையில் தற்பொழுது இமான் குடும்ப விவகாரம் சிவகார்த்திகேயன் இமேஜை மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் மத்தியில் டேமேஜ் செய்துள்ளதால் மீண்டும் சிவகார்த்திகேயன் தன்னுடைய இமேஜை மீட்டெடுப்பதில் சிரமப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்.

இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை, இமான் இதை எல்லாமா,? வெளியில் சொல்லி விடுவாரா? என்று ஒரு மெதப்பில் சிவகார்த்திகேயன் இருந்து வந்திருக்கலாம், ஆனால் இமான் நாசுக்காக சிவகார்த்திகேயன் தனக்கு எந்த மாதிரியான துரோகத்தைச் செய்தார் என்று ஓரளவு சொன்னாலும், பொதுமக்கள் இமான் என்ன சொல்ல வருகிறார் என்பதை நன்றாக புரிந்து கொண்டு விட்டனர்.

இதனால் பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்திற்கு சிவகார்த்திகேயன் உள்ளாகி உள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இமேஜ் மிகப் பெரிய டேமேஜ் அடைந்துள்ள நிலையில் தன்னுடைய இமேஜை மீட்டெடுப்பதற்காக சிவகார்த்திகேயன் நான் ரொம்ப தூய்மையானவன் இமான் சொல்வதெல்லாம் பொய் என்று ஒரு தன்னை யோக்கியனாக காமிக்க, இமானை அயோக்கியனாக சித்தரிக்கும் முயற்சியில் சிவகார்த்திகேயன் இறங்கினால்.?

அது மிகப் பெரிய விபரீதத்தை சிவகார்த்திகேயனுக்கு ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கின்றனர் சினிமா துறையினர். காரணம் சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகம் குறித்த பல ஆதாரங்களை இமான் வைத்துள்ளதாகவும் அதை ஒவ்வொன்றாக இமான் வெளியிட்டால், சிவகார்த்திகேயனின் கொஞ்சநஞ்ச மானமும் கப்பலேறிவிடும் என்கின்றனர் சினிமா துறையினர்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்து விட்டால் ஓரளவு தப்பித்து விடுவார் என்றும், அவர் வாய் திறந்து தன்னை யோக்கியனாக வெளிப்படுத்துவதற்கு ஏதோ ஒரு வகையில் இமான் சொல்வேதெல்லாம் பொய் என்று சொன்னால் இமான் ஒவ்வொரு ஆதாரத்தை வெளியிட்டாலே போது சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

இந்த நிலையில் இமான் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையேயான விவகாரம் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்திய கொண்டிருக்கையில் இமானின் முன்னாள் மனைவி மோனிகா சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும் இமானுக்கு எதிராகவும் பேசியிருந்தார், அதாவது இமானுக்கு தற்பொழுது பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக சிவகார்த்திகேயன் மீது அபாண்டகுற்றச்சாட்டை சுமத்துகிறார் என்றும்,

சிவகார்த்திகேயன் நல்லவர் வல்லவர் என்றும் புகழ் பாடி இருந்தார், இந்த நிலையில் இமான் தனக்கு பட வாய்ப்பு வேண்டும் அல்லது மார்க்கெட்டை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்றால் உச்ச நடிகர்களை புகழ்ந்து பேட்டி கொடுத்தால் அவர் வாய்ப்புக்காக இதை செய்கிறார் என்று சொல்லலாம், குறிப்பாக சிவகார்த்திகேயன் பற்றி புகழ்ந்து பேட்டி கொடுத்திருந்தால் கூட சிவகார்த்திகேயன் படத்தில் பட வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

ஆனால் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நான் படமே பண்ண போவதில்லை என்று இமான் சொல்வதின் பின்னணியில் இமான் பட வாய்ப்புக்காக இதை பேசவில்லை சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தின் வலியில் வெளிப்பாடுதான் என்பதை சினிமா துறையைச் சார்ந்தவர்களே இமானுக்கு ஆதரவாக பேசி வருவதை பார்க்க முடிகிறது.