எனக்கு அப்பா இல்லை… கண்ணீர் விட்டு கலங்கிய சிறுவன்… கடவுளாக காட்சியளித்த ராகவா லாரன்ஸ்…

0
Follow on Google News

சில நாட்களுக்கு முன்பு அப்பா இறந்து விட்டதாகவும் அம்மா மட்டுமே இருப்பதால் குடும்பம் ஏழ்மையில் வாடுவதாகவும், ஹரிஹரன் என்ற சிறுவன் படிப்பு செலவிற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்து அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்த ராகவா லாரன்ஸ் அந்த சிறுவனை தேடி நேரில் அவரது வீட்டிற்குச் சென்று சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது மட்டுமின்றி அவன் கேட்ட உதவியை வழங்குவதாக உறுதியளித்து குடும்பத்தாரை நெகிழச் செய்துள்ளார்.

என்ன நடந்தது என்பது பற்றி முழுமையாக இங்கு பார்க்கலாம். சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருந்த போதிலும் சரி, இப்போது ஹீரோவாக வளர்ந்த போதிலும் சரி, அன்றிலிருந்து இன்று வரை ராகவா லாரன்ஸ் ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். முக்கியமாக எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இன்றளவிலும் பல்வேறு உதவிகளை சலிக்காமல் செய்து வருகிறார். சமீப காலமாக சோசியல் மீடியாவை திறந்தாலே ராகவா லாரன்ஸ் செய்யும் உதவிகள் பற்றிய செய்திகள் தான் அதிகம் வளம் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த அளவிற்கு இல்லை என்று உதவினாடி வரும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இப்படியான சூழலில் “மாற்றம்” என்ற ஒரு சேவையை ராகவா லாரன்ஸ் தொடங்கி இருக்கிறார். இந்த சேவை மூலம் கிராமப்புறங்களில் விவசாயம் செய்யும் ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் டிராக்டர்களை வழங்கி வருகிறார். சில காலங்களாக ராகவா லாரன்ஸ் செய்யும் உதவிகள் குறித்த வீடியோக்களை இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

அண்மையில் கூட ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவருக்கு டிராக்டரை கொடுக்க போயிருந்த ராகவா லாரன்ஸ், அங்கு தோட்டத்திலேயே சாப்பிட்டு விட்டு புல் தரையில் எளிமையாக ஒரு துண்டை விரித்து படுத்து தூங்கிய காட்சிகள் இணையத்தில் காட்டு தீயாய் பரவியது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் ராகவா லாரன்ஸ் இன் எளிமையையும் உதவும் மனப்பான்மையையும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த வீடியோ ஏற்படுத்திய தாக்கமே இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு அசத்தலான சம்பவத்தை செய்து இருக்கிறார் ராகவா லாரன்ஸ். அதாவது சில தினங்களுக்கு முன்பு ஹரிஹரன் என்ற மாணவன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், “சில மாதங்களுக்கு முன்பு என் அப்பா இறந்து விட்டார். இப்போது எங்களுக்கு அம்மா மட்டுமே இருக்கிறார். எங்கள் குடும்பம் வறுமையில் வாடுவதால் நானும் என் தம்பிகளும் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறோம். நீங்கள் என்னை படிக்க வைத்தால் நான் என் தம்பிகளையும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்வேன். வளர்ந்ததும் கலெக்டர் ஆகி இதே போல் பலருக்கும் உதவி செய்வேன்,” என்று நடிகர் லாரன்ஸிடம் அந்த சிறுவன் உதவி கேட்டிருந்தார்.

இதையடுத்து தற்போது நடிகர் லாரன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “படிப்புக்காக உதவுமாறு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தால் ஹரிஹரன் என்ற சிறுவனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்போமா என்று கூறி, அந்த மாணவரின் வீட்டிற்கு நேரில் செல்கிறார். அதைத்தொடர்ந்து அந்த மாணவரை சந்தித்து தந்த இழப்புக்கு ஆறுதல் கூறி, மாணவனின் படிப்பு செலவை நானே ஏற்கிறேன் என்று வாக்குறுதி கொடுப்பதையும் வீடியோ காட்டுகிறது. அவர் கூறியதைக் கேட்டதும் அந்த மாணவரின் அம்மா மற்றும் பாட்டை கண்களை நிற்பதையும் வீடியோவில் காண முடிகிறது. லாரன்ஸின் உதவும் செயலுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.