நடிகர் முத்துக்களை இத்தனை டிகிரி படிச்சு இருக்காரா.? 58 வயதில் காமெடி நடிகர் சாதனை…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவோடு அதிகமான படங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் முத்துக்காளை. இவருடைய காமெடியான நடிப்பு பலரையும் கவர்ந்திருக்கும். மேலும், செத்து செத்து விளையாடுவோமா… என்ற இவரின் டயலாக்கை யாராலும் மறக்க முடியாது. அதற்குப் பிறகு பல நடிகர்களோடு நகைச்சுவை கேரக்டரில் நடித்திருந்தார்.

ஆனால் சில வருடங்களாக சினிமா பக்கம் எட்டிபார்க்காத இவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக ஒரு செய்தி பரவி வந்தது. பிறகு நான் சாகவில்லை, உயிரோட தான் இருக்கேன் என்று முத்துக்காளை விளக்கமும் கொடுத்திருந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில், சன் டிவியில் ஒளிபரப்பாகும், டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், நான் சினிமாவில் அதிகம் நடிக்காமல் இருப்பதற்கு காரணமே நான் படித்துக் கொண்டிருப்பதால் தான் என்று கூறி இருக்கிறார்.

அதோடு 58 வயதில் ஒருவர் படிக்க முடியுமா என்றும், அதுவும் இவர் எத்தனை டிகிரி வாங்கி இருக்கிறார் என்று கூறியது அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப்பு துக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு நடிகர்களின் பின்னணியும் வெளிவந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த மாதம்தான் நடிகர் சங்கம் புலியின் மனைவி ஒரு ஆர்மி ஆபீசர் என்று தெரியவந்து பலரும் அவரை பாராட்டி வந்தனர்.

தற்போது நடிகர் முத்துக்காளை, படிப்பிற்கு வயதில்லை என்பதற்கேற்ப, தனது 58 வது வயதில் படித்து இதுவரை பல டிகிரி வாங்கியிருக்கிறார். சிறு வயதிலேயே இவர் படிக்காமல் பைட் மாஸ்டராக வேண்டும் என்ற கனவோடு சுற்றி வந்திருக்கிறார். மேலும் புரூஸ்லீ, ஜாக்கிசான் ஆகிய படங்களை பார்த்து பன்னிரண்டு வயதிலேயே சண்டை கற்றுக்கொள்ள ஆரம்பித்த இவர், 18 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 20 வயதில் கராத்தே கிளாஸ் எடுக்க தொடங்கிய இவர், கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தேவும் கற்றுக் கொடுத்திருக்கிறார். பின்னர்தான் படங்களில் பைட் மாஸ்டராக அறிமுகமான இவருக்கு, காமெடி சென்ஸ் அதிகமாக இருக்கிறது என படத்தில் காமெடியனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பின்னர் இவருக்கு காமெடி கதாபாத்திரம் செட் ஆனதால், இதுவரை கிட்டத்தட்ட 240 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.

இதற்கிடையே தான் இவர் பயங்கரமான குடிகாரனாகவும் இருந்திருக்கிறார். இவர் குடிப்பதை வைத்து பலர் இவரை அவமானப்படுத்தியதால் ஒரு கட்டத்தில் குடியை விட்டு, இவர் கடந்த ஆறு வருடங்களாக குடிப்பதில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்நிலையில் தான் இவர் அந்த அவமானத்திலிருந்து வெளியே வந்தாலும் அடுத்த அவமானத்தில் சிக்கி இருந்திருக்கிறார். அதாவது இவரது மகனை பள்ளியில் சேர்த்த போது சர்டிபிகேட்டில் இவரின் கல்வி தகுதி மட்டும் Blank-காக இருந்திருக்கிறது.

இதனால் நாம் மட்டும்தான் படிக்கவில்லையா என்ற அவமானத்தில், அந்த blank-காக இருந்த இடத்தை நான் நிரப்புகிறேன் என தனது வயதை பற்றியும் கவலைப்படாமல் கிட்டத்தட்ட 50 வயதுக்கு மேலாகியும் படிக்க ஆரம்பித்திருக்கிறார். இவர் படிக்க ஆரம்பித்ததால் படங்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்த சூழ்நிலையில் தான் இவரை பலரும் இறந்து விட்டதாகவும் சொல்லிருக்கின்றனர்.

இந்நிலையில் தான் நான் ஒன்றும் இறக்கவில்லை, என் மீது உண்டான அவமானத்தை துடைக்க படித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தான் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், என்னென்ன டிகிரி படித்திருக்கிறேன் எனக் கூறியது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏனெனில் முதலில் BA history படித்து பட்டம் வாங்கிய பிறகு, இரண்டாவதாக MA Tamil படித்தும் பட்டம் பெற்று இருக்கிறார்.

அடுத்தது மூன்றாவதாக B.lit படித்து இதில் First Class-ல் தேர்வு பெற்றிருக்கிறார். மேலும் இதோடு நிறுத்தாமல் அடுத்த டிகிரியும் படித்து, அதில் ஒரு வருடமும் முடித்திருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக ஒன்பது வருடம் படித்துக் கொண்டிருக்கும் முத்துக்காளையை பார்த்து பலரும் வியந்து போய் உள்ளனர். மேலும் பள்ளியில் தன் மகன் முன் ஏற்பட்ட அவமானத்தை துடைக்க 58 வயது என்றும் பாராமல் படிக்கும் இவரை பாராட்டியும் வருகின்றனர்.