போயஸ் கார்டனில் ரகசியமாக தனுஷ் உடன் தங்கியிருப்பது யார் தெரியுமா.? மாமனார் வீட்டு பக்கத்திலேவா..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் கடந்த வருடம் ஜனவரி மாதம் 17ஆம் தேதி நள்ளிரவில் ஒரு மனதாக இருவரும் பிரிவதாக தனித்தனியாக அறிவிப்பை வெளியிட்டு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்கள். தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக எடுத்த முடிவுக்கு அவர்களின் அனுதாபிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, மீண்டும் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைந்து வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

குறிப்பாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவர் குடும்பத்தினரும் பிரிந்த தம்பதியினர் மீண்டும் இணைத்து வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர். இருந்தாலும் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்ததால் மீண்டும் அவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் இருவரையும் இணைத்து வைக்க நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் அவரவர் சினிமாவில் தங்கள் கவனத்தை செலுத்த தொடங்கியவர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருக்கும் ஒரு சமூகமான முடிவு ஏற்பட்டு இருவரும் மீண்டும் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது. மேலும் தனுஷ் -ஐஸ்வர்யா இருவரும் பிரிவதற்கு முன்பு குடியிருந்த சென்னை ஆர்யாபுரத்தில் உள்ள இவர்களின் வீட்டிற்கு இருவரும் ரகசியமாக வந்து தங்கிவிட்டு செல்வதாக கூறப்பட்டது.

இதை உறுதிப்படுத்தும் விதத்தில் தனுஷ் மூத்த மகன் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைபடம் வெளியானது. இதனை தொடர்ந்து தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தனுஷ் பிறந்த தினத்தில் மீண்டும் இணைந்ததை அதிகாரப்பூரவமாக அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அப்படி ஒரு எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தனுஷ் போயஸ் கார்டனில் சுமார் 150 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக கட்டியுள்ள புதிய வீட்டின் கிரகப்பிரதேச நிகழ்ச்சியில் மனைவியுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்து விட்டதாக அறிவித்துவிட்டு, அந்த புதிய வீட்டில் மனைவி ஐஸ்வர்யா உடன் குடியேறுவார் என தகவலும் வெளியானது. ஆனால் தாய் – தந்தையுடன் தனுஷ் நடத்திய புதிய வீட்டின் கிரகப்ரவேச நிகழ்வில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் குடியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டில் ஒரு பெண் அவருடன் குடியிருந்து வருவதாகவும், அந்த பெண்ணைத்தான் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசு கிசுகள் வெளியானது. இதனை தொடர்ந்து தனுஷ் உடன் ஒரே வீட்டில் குடியிருக்கும் அந்த பெண் குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டி உள்ள மிக பிரம்மாண்டமான வீட்டில் அவருடன் ரகசியமாக குடியிருந்து வருவது வேறு யாரும் இல்லை என்றும், அது அவருடைய மனைவி ஐஸ்வர்யா தான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு முன்பு தனுஷ் ஏற்கனவே குடியிருந்த ஆர்யாபுரம் வீட்டில் இருவரும் ரகசியமாக அடிக்கடி அந்த வீட்டிற்கு சென்று தங்கி வந்த நிலையில் தற்பொழுது போயஸ் கார்டனில் புதியதாக தனுஷ் கட்டியுள்ள வீட்டில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கி வருவதாக கூறப்படுகிறது.

அதனால் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும், மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் ரகசியமாக மீண்டும் இணைந்து, ரகசியமாக ஒரே வீட்டில் தங்கி வருவதற்கு பதில் வெளிப்படையாகவே இருவரும் மீண்டும் இணைந்து விட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடுவதில் இருவருக்கும் என்ன தயக்கம் என்கின்ற குழப்பமும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.