என்ன சார் இது.. சொன்ன கேளுங்க…அஜித்துக்கு அட்வைஸ் செய்த மகிழ் திருமேனி..

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இயக்குனர் மகில் திருமேனிக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே அஜித் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு விக்னேஷ் இவனுக்கு கொடுக்கப்பட்டு, கடந்த எட்டு மாதங்களாக விக்னேஷ் சிவனுக்கு படத்தின் முழு ஸ்கிரிப்ட் எழுதும் பணி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனின் முழு ஸ்கிரிப்ட் கேட்ட அஜித் செம டென்ஷனில் இந்த ஸ்கிரிப்ட் எழுத தான் உங்களுக்கு எட்டு மாதம் தேவைப்பட்டதா.?. இது போன்ற குப்பை கதையில் எப்படி நடிக்க முடியும் என்று ஒரே முடிவோடு வேறு ஒரு இயக்குனரை மாற்றிவிட்டார். அந்த வகையில் அஜித் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் வாய்ப்புகள் மகிழ் திருமணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே விக்னேஷ் அவனிடம் ஏமாந்தது போன்று இம்முறை இருந்துவிடக் கூடாது என்பதற்காக படத்தின் முழு ஸ்கிரிப்ட் கொண்டு வந்த பின்பே படத்தின் இயக்குனருக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தயாரிப்பு நிறுவனமும் நடிகர் அஜித்குமாரும். அந்த வகையில் சென்னையில் உள்ள மிகப்பெரிய தனியார் நட்சத்திர ஹோட்டலில் மிக தீவிரமாக ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார் மகிழ்திருமேனி.

அவ்வப்போது அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு அஜித் தனியாக சென்று ஸ்கிரிப்ட் பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறார். இந்த நிலையில் பொதுவாகவே அஜித் ஆங்கில படங்களை அதிகம் விரும்பி பார்க்கக் கூடியவர் என்றும். அந்த வகையில் தனக்கு பிடித்த ஆங்கில படங்களின் சீடியை பெரும் அளவு தன்னுடைய வீட்டில் சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டவர் நடிகர் அஜித்.

துணிவு படத்தை இயக்குவதற்கு முன்பு ஹெச். வினோத்திடம் இரண்டு ஆங்கில படத்தின் சீடியை கொடுத்து இந்த படத்தில் உள்ள சில முக்கிய காட்சிகளையும் போன்று துணிவு படம் எடுக்கப்பட வேண்டும் என்று அஜித் தெரிவிக்க அதன்படியே அந்த இரண்டு சீடியையும் பார்த்து சில காட்சிகளை துணிவு படத்தில் அமைத்துள்ளார் ஹெச்.வினோத்.

இந்த நிலையில் அஜித்தை முதல் முதலில் சந்தித்து கதை சொல்ல சென்ற மகிழ் திருமேனிக்கு இரண்டு சீடியை கொடுத்து இதில் ஒரு கதையை தேர்வு செய்ய வலியுறுத்தியுள்ளார் அஜித். சில நாட்களுக்கு பின்பு அஜித் அந்த இரண்டு சிடி குறித்து கேட்க. இது என்ன சார் கதை, இதைவிட பிரமாண்டமாக நான் உங்களுக்கு கதை சொல்லுகிறேன் என இரண்டு கதைகளை அஜித்திடம் தெரிவித்துள்ளார் மகிழ் திருமேனி.

இரண்டு கதையை கேட்ட அஜித் அதில் ஒரு கதையை தேர்வு செய்த்தவர், இருந்தாலும், தான் ஏற்கனவே மகிழ் திருமேனிக்கு கொடுத்த இரண்டு சிடியில் இருந்து சில காட்சிகளை சுட்டி காட்டி. அந்த காட்சிகள் இந்த படங்களில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் அஜித். அதற்கு சார் இதெல்லாம் என்ன காட்சிகள், நீங்கள் பிரமிக்கும் வகையில் இதை விட அருமையாக படமாக்கலாம் என மகிழ் திருமேனி அஜித்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் புதிய படம் குறித்து கதை மற்றும் காட்சிகளில் தெரிவித்த எந்த ஒரு கோரிக்கையையும் அசப்ட் பண்ணாத மகிழ் திருமேனி, தன்னுடைய இயக்குனர் வேலைகளில் இடையூறு செய்யாமல் இருந்தால் படம் மிக பெரிய பாராட்டை பெரும் என மறைமுகமாக அஜித்துக்கு அட்வைஸ் செய்துள்ளார் மகிழ் திருமேனி என கூறப்படுகிறது.