சிம்பு அம்மா போடும் கண்டிஷன்.. தெறித்து ஓடும் இயக்குனர்கள்.. நிரந்தரமாக வீட்டில் முடங்கும் சிம்பு…

0
Follow on Google News

குழந்தை நட்சத்திரமாக இரண்டு பிறந்ததில் இருந்தே சினிமாவில் நடித்து வரக்கூடியவர் நடிகர் சிலம்பரசன், குழந்தை நட்சத்திரமாகவே ஒரு ஸ்டாராக ஜொலித்த சிலம்பரசன், கதாநாயகனாக அறிமுகமாகி ஆரம்பத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்தாலும் அடுத்தடுத்து சில ஹிட் படங்களை கொடுத்து தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டார்.

ஆனால் சிலம்பரசன் படப்பிடிப்பு தளத்திற்கு ஒழுங்காக வருவதில்லை, இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை, சிலம்பரசனை நம்பி படம் எடுக்கின்ற தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடியவர் சிலம்பரசன் என்கின்ற தொடர் குற்றச்சாட்டின் காரணமாக, சிலம்பரசனை வைத்து படம் எடுப்பதற்கு பல முன்னணி தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தயங்கி வந்தனர்.

இதனால் சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கியிருந்த சிலம்பரசன், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது, இந்த நிலையில் மாநாடு படத்திற்கு முன்பு பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கி கிடந்த நடிகர் சிம்பு, மாநாடு பட வெற்றிக்குப் பின்பு தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தினார்.

ஆனால் சிம்பு நடிப்பில் அடுத்த வெளியான வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இருந்தும் மாநாடு வெற்றியை சுட்டிக்காட்டி தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ள சிலம்பரசன், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதையைக் கேட்டு விட்டு. சம்பள விஷயத்தை தன்னுடைய தாயிடம் பேசி முடிவு செய்யுங்கள் என தெரிவித்து விடுகிறார்.

இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்களும் மற்றும் இயக்குனர்களும் சிலம்பரசனின் அம்மாவை சந்தித்து சம்பளம் குறித்து பேசுகையில், சுமார் 40 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம் சிலம்பரசன் தாயார், பல தயாரிப்பாளர்கள் 40 கோடி என்றதும் வேற எந்த ஒரு வார்த்தையும் சொல்லாமல் சொல்லி அனுப்புகிறோம் என்று தெரிந்து ஓடி வருகிறார்களாம். மேலும் சில தயாரிப்பாளர்கள் கொஞ்சம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டால் அதற்கு ரொம்ப காரர் காட்டுகிறாராம் சிலம்பரசனின் அம்மா.

சிலம்பரசனின் தாயாரின் இந்த சம்பள விஷயத்தில் கேட்டு பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தெறித்து ஓடும் நிலையில், சிலம்பரசன் கைவசம் பத்து தலை படத்தை தவிற வேற எந்த ஒரு படமும் இல்லை . அதே நேரத்தில் தற்பொழுது சம்பளத்தை சற்று குறைத்துக் கொண்டு சிலம்பரசன் பல படங்களில் கமிட்டாக வேண்டும், அப்படி இல்லை என்றால் பத்து தலை படம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டால் அதன் பின்பு சிலம்பரசனே சம்பளத்தை குறைத்தாலும் கூட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சிம்புவை வைத்து படம் இயக்க முன்வர மாட்டார்கள் என்கின்ற தயாரிப்பாளர் தரப்பினர்.