அஜித் ரசிகர்கள் கொண்டாடும் கோட் திரைப்படம்… தரமானம் சம்பவம் செய்த வெங்கட் பிரபு…

0
Follow on Google News

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுக்க வெளியிடப்பட்ட கோட் படத்தை மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று கண்டுபிடித்து வருகின்றனர். விஜய் படம் என்றால் அது நன்றாகவே இருந்தாலும் ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் பாராட்டுவதை நம்மால் பார்க்க முடியாது. காரணம், இங்கு ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பஞ்சாயத்தை விட சக ரசிகர்கள் சண்டை படுஜோராக நடக்கும்.

ஆனால், இந்த கோட் படத்தை அப்படி பிற நடிகர்களின் ரசிகர்கள் அடிக்காதவாறு கைகளை கட்டி போட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு! படத்தில் ரஜினி ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் வகையில் படையப்பா பின்னணி இசையும் அஜித் ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்யும் வகையில் மங்காத்தா பின்னணி இசையும் போடப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட காட்சிகளோடு விஜயின் நடிப்பும் சேர்ந்து ஆடியன்ஸுக்கு VISUAL விருந்து கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

இது போதாது என கங்குவா திரைப்படத்தின் போஸ்டரையும் மொபைல் வால்பேப்பராக ஒரு காட்சியில் வைத்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்களும் Happy Mode-ல் உள்ளனர். இத்தனை நடிகர்களை படத்தில் குறியீடுகளாக காட்டியதற்கே திரையரங்கம் அதிர்ந்து இருக்கும். இதை விட சிறப்பான சம்பவமாக 2K கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் சஸ்பென்சாக கேமியோ ரோலும் நடித்திருக்கிறார். இதுதான் இப்போது நடிகர் விஜய் மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்தி உள்ளது.

என்ன தான் பெரிய நடிகராக இருந்தாலும் அடுத்த தளபதி என ஒப்பிட்டு பேசு அளவு உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன் போன்ற சக போட்டி நடிகர் தன்னுடைய படத்திலேயே சிறப்பு தோற்றத்தில் காட்டியது விஜய்யின் பெருந்தன்மையை காட்டுகிறது என பலரும் பாராட்டி வருகின்றனர். என்னதான் பாராட்டுகள் வந்து ஒரு பக்கம் குவிந்தாலும் இதில் விஜயின் இன்னொரு அரசியல் கணக்கும் இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

குறிப்பாக இத்தனை ஆண்டுகள் வெளியான பல படங்களில் எதிர் நடிகர்களை சீண்டி பல காட்சிகளை வைக்க அனுமதித்த விஜய் தற்போது திடீரென இப்படி பெருந்தன்மை பேராசனாக மாறியிருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த சூழலில் நாளை தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு கேட்டு செல்லும்போது அனைத்து நடிகர்களின் வாக்குகளும் நமக்கு வேண்டும். அதனால் தற்போது அதற்கு அடித்தளம் அமைக்கிறார் என நடிகர் விஜய் மீது சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். மேலும் எலியும் பூனையும் போல் மோதிக் கொள்ளும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தற்போது அப்படி செய்வதில்லை! விஜய் ரசிகர்களே பல இடங்களில் பொறுமையாக தான் செல்கிறார்கள்.

மேலும் அப்படியாக பிற நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதும் விஜய் ரசிகர்கள் முன்பு போல் அந்த படத்தை தாழ்த்தியோ அல்லது கலாய்த்தோ பதிவுகள் இடுவதில்லை இதற்கான காரணம் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையான விஜய் இடமிருந்தே சில அறிவுரைகள் வந்ததாகவும் இதற்குப் பின்பு இதுபோன்ற சர்ச்சைகளில் நாம் ஈடுபடக் கூடாது எனவும் பிற நடிகர்கள் குடித்து பதிவிடும் போது மிகவும் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளாராம்.

என்னதான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இது போன்ற அறிவுரைகளை கூறி ரசிகர்களை பிரச்சினையில் சிக்காமல் வைத்திருந்தாலும் ஆங்காங்கே ரசிகர்கள் பிற நடிகர்களின் ரசிகர்களுடன் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே தான் படத்தில் காட்சியாகவே வைத்து வெளி உலகத்திற்கு வெளிப்படையாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளார் நடிகர் விஜய். இதன் பின்பாவது ரசிகர்களின் இடையே நடக்கும் சண்டை குறைந்து அனைத்து ரசிகர்களும் ஒற்றுமையாக சினிமாவிற்கு செல்ல வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here