சிவகுமார் குடும்பத்துக்குள் சேட்டையை காண்பித்த ஞானவேல் ராஜா… வீட்டை விட்டு வெளியே விரட்டிய சிவகுமார்…

0
Follow on Google News

நடிகர் சிவகுமாரின் உறவினரான ஞானவேல்ராஜா வசதி படைத்தவர், மேலும் ஞானவராராஜா குடும்பம் சிவக்குமார் குடும்பமும் மிக நெருங்கிய உறவில் இருந்து வந்ததால் தன்னுடைய பிள்ளை போன்று ஞானவேல் ராஜாவை சிவகுமார் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஞானவேல் ராஜா சினிமாவில் தயாரிப்பாளராக உருவானதற்கு முக்கிய காரணம் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் தான்.

இந்த நிலையில் ஆரம்பத்தில் கார்த்திக் – சூர்யா ஆகியோரின் நடிப்பில் படங்களை தயாரித்து வந்த ஞானவேல் ராஜா ஒரு கட்டத்தில் மற்ற நடிகர்களை வைத்தும் படம் தயாரிக்க தொடங்கினார், இதற்கு முக்கிய காரணம் அப்போது சிவக்குமாருக்கும், ஞானவேல் ராஜாவுக்கும் இடையில் நடந்த ஒரு பஞ்சாயத்து தான் என பிரபல சினிமா பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழ் சினிமாவில் மிக ஒழுக்கமான நடிகர் என உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் அனைவரும் முதலில் கை நீட்டக்கூடியவர் நடிகர் சிவகுமார். அந்த வகையில் தன்னுடைய பிள்ளைகளையும் தன்னை போல் ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்து வந்தவர் நடிகர் சிவகுமார். இந்த நிலையில் தன்னுடைய இரண்டு மகன்களையும் ஞானவேல் ராஜா தவறான பாதைக்கு அழைத்து செல்கிறாரா என்கின்ற சந்தேகம் சிவக்குமார் மனதில் தோன்றியதாக கூறப்படுகிறது.

அதில் முக்கியமாக நடிகர் சூர்யா – ஜோதிகா இருவரும் காதலித்துக் கொண்டிருந்தபோது அந்த காதலுக்கு சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்து வந்த ஒரு நிலையில், ஞானவேல் ராஜா சூர்யா – ஜோதிகா காதலுக்கு பல வகையில் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் ஞானவேல் ராஜா மீது கடும் கோபமடைந்த நடிகர் சிவகுமார், தன்னுடைய வீட்டு பக்கமே வர வேண்டாம் என்று விரட்டியதாக சினிமா துறையைச் சேர்ந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இடையில் நடிகர் கார்த்திக் திருமணத்துக்கு முன்பு தன்னுடன் நடித்த சக நடிகையுடன் கிசு கிசுவில் சிக்கினார், அப்போது கார்த்திக்கு பல வகையில் உதவி செய்துள்ளார் ஞானவேல்ராஜா ராஜா என்றும், இதுவும் ஞானவேல் ராஜா மீது சிவகுமாருக்கு கோபம் ஏற்பட காரணம் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளராக ஞானவேல் ராஜா ஒரு கட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அளவுக்கு அதிகமாக பணம் செலவாகுவதை தொடர்ந்து சிவக்குமாரை சந்தித்து படம் அளவுக்கு அதிகமாக செலவாகி கொண்டிருக்கிறது என தெரிவித்ததும்,

சிவக்குமார், உடனே பரவாயில்லை உன்னால் முடியவில்லை என்றால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் படத்தை உடனே நிறுத்தி விடு என்று ஞானவேல் ராஜாவிடம் தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து அமீரிடம் சென்று இதுக்கு மேல் செலவு செய்ய முடியாது என ஞானவேல் ராஜா தெரிவித்ததாகவும், அதற்கு அமீர் தன் கதையின் மீது கொண்ட நம்பிக்கையினால் கடனை வாங்கி பருத்திவீரன் படத்தை எடுத்து முடித்து விட்டார்.

பின்பு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஞானவேல் ராஜா மீது அமீர் வழக்கு தொடுத்தது இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது, இந்த நிலையில் நீண்ட நாள் பிரச்சனையை சமீபத்தில் ஞானவேல் ராஜாவின் பேட்டி மிகப்பெரிய அளவில் ஊதி பெரிதாகிவிட்டது, அமீரை வாய்க்கு வந்தபடி ஞானவேல் ராஜா விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக இதுவரை ஐயா சிவகுமார் அவர்கள் ஏதும் பேச வேண்டாம் என தெரிவித்து இருந்ததால் தான் நான் அமைதியாக இருந்தேன்.

ஆனால் அமீர் கண்டபடி பேசிய பின்பு இதுக்கு மேல அமைதியா இருக்க முடியாது என்று தோரணையில் ஞானவேல் ராஜா பேசியது தொடர்ந்து அமீருக்கு ஆதரவாக சினிமா துறையினர் பலரும் களத்தில் இறங்கியது சிவக்குமார் குடும்பத்திற்கு மிகப்பெரிய டேமேஜை உருவாக்கியது. மேலும் ஞானவேல் ராஜா பின்னணியில் இருந்து சிவக்குமார் குடும்பத்தினர் இயக்குகிறார்களா என்கின்ற விமர்சனமும் எழுந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து ஞானவேல் ராஜாவை மிக கடுமையாக சிவக்குமார் திட்டியதாக கூறப்படுகிறது. அதாவது ஞானவேல் ராஜாவிடம் பருத்தி வீரன் விவகாரம் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கையில் எதற்கு இப்படி தேவையில்லாமல் பேசி பிரச்சனை உருவாக்குகிறார். நான் உன்னை பேச சொன்னனா.? என்று கடுமையாக திட்டி ஒரு ஒழுக்கமா மன்னிப்பு கேள் என சிவகுமார் தெரிவித்ததை தொடர்ந்து ஞானவேல் ராஜா அமீரிடம் வருத்தம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டதாக கூறப்படுகிறது