அரசு பள்ளியில் சேர்ந்து இந்தி படிக்கும் சினிமா நடிகரின் மகள்..!வியப்பூட்டும் அவர் சொல்லும் அட்வைஸ் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

திரௌபதி, ருத்ரதாண்டவம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு தற்போது சுமார் அடுத்தடுத்து ஏழு புதிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் நடிகரும், பிரபல சினிமா வினியயோகஸ்தருமான ஜெயம் SK கோபி தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். அரசு பள்ளியில் தனது மகள் சாதனாவை சேர்க்க சொந்த வீட்டிலேயே எதிர்ப்பு வந்தாலும் அந்த எதிர்ப்பை மீறீ அவர்களுக்கு உண்மையை எடுத்துரைத்து என் மகளை அரசுப்பள்ளியில் சேர்ந்து படிக்க வைத்துள்ளார்.

கொரோனா தோற்று காரணமாக பள்ளிகள் திறக்காமல் இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு மகள் அரசு பள்ளிக்கு செல்வது குறித்து நடிகர் ஜெயம் SK கோபி தெரிவித்ததாவது, மகள் சாதானா உற்சாகமாக பள்ளி செல்ல தொடங்கிவிட்டாள். என் நண்பர்களும் எதிர்கால சந்ததியினரும் உங்கள் பிள்ளைகளையும் அரசு பள்ளியில் சேர்க்க முன்வாருங்கள் என்ற அன்பான வேண்டுகோளையும் முன்வைக்கிறேன்..

மேலும் என் மகளுக்கு இந்தி மொழி படிப்பையும் தனியாக வகுப்பு வைத்து சொல்லி கொடுக்கவுள்ளேன். என தருமை நண்பர்களே உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் கட்டாயம் இந்தி மொழியை கற்றுக்கொடுங்கள்..இந்தி மட்டுமல்ல மற்ற உலக மொழிகளையும் கற்றுக்கொடுங்கள். தமிழ் மொழி நம் உயிருக்கு நிகரானது…ஆனால் இந்த திராவிட அரசியல் வாதிகள் இந்தியை திணிக்காதே என்று நம்மை இந்தி படிக்க விடாமல் செய்துவிட்டு அவர்கள் வீட்டு குழந்தைகளுக்கு மட்டும் பல மொழிகளை கற்றுக்கொடுத்து,

அவர்களுக்கு கீழே நம்மை வைத்து இன்னும் நம் தலைமுறையை அடிமையாக்கி வைத்து இருக்கிறார்கள். இதற்க்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி உள்ளது. ஆகையால் மக்களே நம் முன்னோர்கள் செய்த தவறை நாம் செய்யக்கூடாது…நம் வீட்டு பிள்ளைகளுக்கு சகல மொழிகளையும் கற்றுக்கொடுப்போம்.. தமிழனையும் தமிழ்நாட்டையும் உலக அரங்கில் தலைநிமிரச்செய்வோம்… இந்தி கத்துக்குட்டா இந்தியாவையே தமிழன் ஆளுவான்..

மத்திய அரசு அமைச்சர்கள் ?மத்திய அரசு பிரதமர்கள் பேசுற இந்தி தமிழனுக்கு புரிஞ்சிட்டா அப்புறம் நம்ம பொழப்புல மண்ணு விழுந்துரும் அதனால இந்த மக்களை இந்தி படிக்கவே விடக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம்.இதுதான் கசப்பான உண்மை.அதனாலதான் நம்மூர் அரசியல்வாதிகள் இந்தியை திணிக்காதே என்று நாடகம் ஆடுறாங்க.. விழித்துக்கொள்ளுங்கள் மக்களே என நடிகர் ஜெயம் SK கோபி தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு வெட்கமாக இல்லையா.? முக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு.. எதற்கு தெரியுமா.?