வலைவீசி தேடும் பிரபல தயாரிப்பு நிறுவனம்… பெங்களூரில் ஐக்கியமான ரஜினி…

0
Follow on Google News

கடந்த மாதம் வாழும் கலை அமைப்பின் நிறுவனத் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சென்னையில் உள்ள டிகர் ரஜினிகாந்தை இல்லத்தில் நேரில் சென்று ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகத்தின் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆன்மீக குருக்களை அவ்வப்போது சந்தித்து ஆசி பெறுவது அவரது வழக்கம்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீக தலைவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்றார் ரஜினிகாந்த். இந்த சந்திப்பின் போது பெங்களூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்திற்கு நேரம் கிடைக்கும் போது அங்கே வந்து சில நாட்கள் தாங்கி எங்களுடன் யோக செய்து திரும்பினால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் என ரவிசங்கர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை முடித்து பெங்களூர் சென்றுள்ள ரஜினிகாந்த் அங்கே ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் தங்கி யோக செய்து மன அமைதியை ஏற்படுத்தி வருகிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் இந்த படத்தை பல தயாரிப்பு நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கையில், தற்பொழுது ஜெயிலர் படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்தை சந்தித்து லோகேஷ் கனகராஜ் – ரஜினி இணையும் ப்ராஜெக்ட்டை கையில் எடுக்க முயற்சி அவரை வலை வீசி தேடி வந்துள்ளது.

அப்போது ரஜினிகாந்த் பெங்களூரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் மன அமைதிக்காக யோகா செய்து வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் பெங்களூரில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் இணையும் அந்த ப்ராஜெக்ட் எப்படியாவது கையில் எடுத்த வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் மிக தீவிரமாக களம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.