கள்ள காதல் விவகாரம்…. அடி தடியில் முடிந்த ஷங்கர் மகளின் திருமண வாழ்க்கை..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் ஷங்கர். இந்திய அளவில் வியந்து பார்க்கும் வகையில் இவரது சினிமா ஆங்கில படத்துக்கு நிகராக ஒவ்வொரு காட்சியும் இவரின் படத்தில் இடம் பெற்று இருக்கும். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் எண்ணிக்கையில் மிக குறைவு என்றாலும், ஓன்று அல்லது இரண்டு படங்கள் தவிர்த்து மற்ற படங்கள் அனைத்தும் மிக பெரிய வெற்றியை ஷங்கருக்கு பெற்று தந்தது.

பிரமாண்ட இயக்குனர் என வலம் வந்த இயக்குனர் சங்கர் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல சோதனைகளை சந்தித்து வருகிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ஐ படம் தான் இவர் கொடுத்த கடைசி வெற்றி. இதன் பின்பு சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் 2.0 படுதோல்வி அடைந்து, ஷங்கருக்கு மிக பெரிய சரிவை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியிலே நிற்கிறது.

இப்படியே போனால் ஷங்கர் என்கிற ஒரு இயக்குனர் காணாமல் போய் விடுவார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், தெலுங்கு நடிகர் ராம் சாரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் ஷங்கர். இப்படி சினிமா துறையில் பல சோதனையை சந்தித்து வரும் ஷங்கர், குடும்பத்திலும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளர் தாமோதரன் மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். ரோஹித் – ஐஸ்வர்யா திருமணம் கொரோனா தொற்று காரணமாக முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கு பெரும் வகையில் குறைந்த நபர்களே கலந்து கொண்ட திருமண நிகழ்வாக அமைத்தது. தற்பொழுது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மக்கள் இயல்பு வாழ்ககைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்ட ஷங்கர் மே 1 தேதி அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செயல்பட்டு வந்தார். அழைப்பதில் என அனைத்தும் கொடுக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, அழைப்பிதழ் கொடுத்த அனைவருக்கும் ஷங்கர் தரப்பில் இருந்து செய்தி அனுப்பப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான காரணம் தெரிவிக்கவில்லை.

இது குறித்து விசாரித்ததில் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா – ரோஹித் இருவருக்கும் திருமணம் முடிந்த சில மாதங்களில் அடிக்கடி சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. ரோஹித் திருமணத்துக்கு முன்பே சில பெண்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார், அதை திருமணத்துக்கு பின்பு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது மனைவி ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்துள்ளது.

இது தொடர்பாக இரண்டு குடும்பத்தினர் மத்தியில் பஞ்சாயத்தும் நடந்ததாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா – ரோஹித் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர் இரண்டு குடும்பத்தினர். ஆனால் பஞ்சாயத்து முடிந்து சில நாட்களில் மீண்டும் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு சன்டை நடந்துள்ளது, ஒரு பக்கம் ஐஸ்வர்யா – ரோஹித் திருமண வரவேற்பு நடைபெற்று கொண்டிருக்க, மறுபக்கம் ஐஸ்வர்யா – ரோஹித் சண்டை உச்சகட்டத்தை அடைந்து அடி தடி வரை கூட சென்றதாக கூறப்படுகிறது.

இதன் பின்பு தான் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஷங்கர் மகள் ஐஸ்வர்யா – ரோஹித் இடையில் ஏற்பட்ட மோதலுக்கு முக்கிய கரணம், ரோஹித் சில பெண்களுடன் நெருங்கி பழகி வந்ததாகவும், ரோஹித் கள்ள காதல் விவகாரம் மனைவிக்கு தெரியவந்தது தான் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் என்றும், இதனால் கடும் மன உளைச்சலில் ஷங்கர் இருப்பதாக கூறப்படுகிறது.

நீயெல்லாம் சோறு தான் சாப்புடுறீயா.? சிம்புவை வெளுத்து வாங்கிய ஹரி…எதற்கு தெரியுமா.?