மரியாதை தெரியாதவர் ரஜினிகாந்த்… வேதனையை வெளிப்படுத்திய விஜயகாந்த்.! என்ன நடந்து தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய்காந்த் உடல்நல குறைவு காரணமாக, சினிமா மற்றும் அரசியல் என அனைத்துக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு குடும்பத்தார் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றார். விஜய்காந்த் தற்போதைய நிலைமை அறிந்த சினிமா துறையை சேர்ந்த பலர் தங்கள் வேதனையை தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய்காந்த் வாழ்க்கையில் நடந்த இதுவரை வெளிவராத பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் ஒவொன்றாக வெளியாகி கொண்டிருக்கிறது.

நடிகர் விஜய்காந்த் ஆரம்ப கட்ட சினிமாவில் ரஜினிகாந்த் போட்டியாக வந்து கொண்டிருந்தார், கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கிறார் விஜயகாந்த் என மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற விஜயகாந்த் நிறம் ஒரு பிரச்சனையாக சினிமாவில் அவருக்கு இல்லை என்பதை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் சினிமாவில் உச்சத்துக்கு வந்த விஜய்காந்த சென்னையில் இலவச மெஸ் ஒன்றை ஆரம்பித்து பசியால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அங்கே வந்து இலவசமாக சாப்பிட்டு செல்லும் வகையில் பலர் பசியை தீர்த்தவர் விஜய்காந்த்.

சினிமா துறையில் பல பிரச்சனைகளை முன்னின்று தீர்த்து வைத்தவர் விஜயகாந்த். அதற்கான தனது தன்மானத்தை கூட விட்டு கொடுக்க தயங்காதவர். நடிகர் சங்கம் கடனில் தத்தளித்த போது, அந்த கடனை தீர்க்க மலேஷியா மற்றும் சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விஜய்காந்த், இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவருக்கு அழைப்பு விடுக்க ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்றுள்ளார் விஜயகாந்த்.

ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்ற விஜய்காந்த அங்கே தரையில் அமர்ந்து நீங்கள் கலை நிகழ்ச்சிக்கு வருவதாக உறுதி கொடுத்தால் தான் நாற்காலியில் அமர்வேன் என ரஜினிகாந்த் சம்மதத்தை பெற்றார் விஜயகாந்த். இப்படி பொது பிரச்சனைக்கு சுயநலம் இல்லாமல் தனது தன்மானத்தை கூட விட்டு கொடுக்கும் விஜயகாந்த் கடந்த காலங்களில் ரஜினிகாந்த் குறித்து தெரிவித்த ஒரு சம்பவத்தை பிரபல சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தை பத்திரிக்கைகளும், ஊடகங்களும் உயர்த்திப் பிடிப்பது பற்றி வருத்தத்தை வெளிப்படையாக தெரிவித்த விஜயகாந்த், நீங்கள் என்னை சந்திக்க வரும் போது உங்களுக்கான மரியாதையை கொடுத்து, உங்களிடம் அன்பாகவும், அக்கறையுடன் நடந்து கொள்கிறேன், அனல் உங்களை கண்டு கொள்ளாத, உங்களை சிறிதும் மதிக்காத ரஜினிகாந்த் புகைப்படத்தை உங்கள் பத்திரிக்கையின் அட்டை பக்கத்தில் பெரியதாக வெளியிடுகிறீர்கள்.

அவரை பற்றி ஓ..கோ என்று பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறீர்கள், அவர் தான் டாப் என்று மரியாதை தெரியாத, உங்களை மதிக்காத ரஜினிகாந்த் குறித்து புகழ் பாடும் உங்களை பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை என வருத்ததுடன் விஜயகாந்த் தெரிவித்ததாக பிரபல சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

பயத்தில் பொட்டி பாம்பை அடங்கிய விஜய் … எதற்கு இந்த பயம்.. என்ன நடந்தது தெரியுமா.?