அஜித் படத்தில் இருந்து விரட்டப்படும் விக்னேஷ் சிவன்… அஜித் டென்ஷனுக்கு என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் ரசிகர்களின் மிகுந்த எதிரார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் வலிமை. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை, மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த படம் வெளியாவதர்க்கு முன்பே இது எதிர்பார்த்த வசூலை பெறாது என்பதை உணர்ந்த நடிகர் அஜித்குமார் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரிடம் இது குறித்து பேசியுள்ளார்.

இந்த படம் நஷ்டம் ஏற்படும் என்பதால் உங்கள் தயாரிப்பில் மேலும் ஒரு படத்துக்கு கால் சீட் தருகிறேன் என உறுதியளித்து, அந்த படத்துக்கான படப்பிடிப்பும் தொடங்கியது, இந்த படத்தை வலிமை படத்தின் இயக்குனர் H.வினோத் இயக்குகிறார். இந்த படத்தை முடித்த பின்பு லைக்கா ப்ரொடக்ஷனின் அடுத்த படத்தில் நடிக்கும் அஜித்குமார் ,அந்த படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அஜித் தன்னுடைய புதிய படத்துக்கான இயக்குனரை தேர்வு செய்தபின்பு படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் படத்தின் அடுத்தகட்ட வேலைகள் குறித்து பேசியுள்ளனர், அப்போது படத்தின் கதாநாயகியாக நயன்தாராவை தேர்வு செய்துள்ள விக்னேஷ் சிவன் அவருக்கு இந்த படத்தில் நடிக்க சம்பளமாக 10 கோடி கேட்டுள்ளார், மேலும் இயக்குனர் சம்பளமாக தனக்கும் 10 கோடி தரவேண்டும் என கேட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

அஜித் கால் சீட் கொடுத்ததே பெரிய விஷயம் என்பதால், அஜித் தேர்வு செய்த இயக்குனர் என்பதற்காக விக்னேஷ் சிவன் என்ன சொன்னாலும் ஓகே செய்தது தயாரிப்பு நிறுவனம். இந்த தகவல் அறிந்த நடிகர் அஜித்குமார் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் காற்று வாக்கில் இரண்டு காதல் படம் வெற்றி பெற வில்லை என்றால், அஜித் புதிய படத்துக்கான இயக்குனரை மாற்றிவிட்டு விக்னேஷ் சிவனை வெளியேற்றிவிடலாம் என்கிற முடிவில் அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தற்பொழுது காற்று வாக்கில் இரண்டு படத்தின் நடித்து கொண்டிருக்கும் போதே, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு தற்பொழுது இருவருக்கும் இடையில் உச்சகட்ட மோதல் வெடித்துள்ளதாகவும், அதனால் தான் காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் நடிக்கும் படத்திற்கு இயக்குனர் வாய்ப்பை நயன்தாரா சிபாரிசில் தான் பெற்றார் விக்னேஷ் சிவன்.

தற்பொழுது விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக செம்ம கோபத்தில் இருக்கும் நயன்தாரா, காற்று வாக்கில் இரண்டு காதல் படம் வெளியான பின்பு அஜித் நடிக்கும் புதிய படத்தில் விக்னேஷ் சிவன் மாற்றம் செய்யப்பட்டால், மீண்டும் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பை பெறுவதர்க்கு முயற்சி செய்யமாட்டர் நயன்தாரா என கூறப்படுகிறது.

நீ யாருய்யா எனக்கு சான்ஸ் கொடுக்க… ரஜினியிடம் திமிரை காட்டிய நெல்சன்..! என்ன நடந்தது தெரியுமா.?