பெரும் சோகத்தில் விக்னேஷ் சிவன்.. துக்கம் விசாரித்து வரும் சினிமா பிரபலங்கள்.. என்னாச்சு தெரியுமா.?

0
Follow on Google News

லைக்கா தயாரிப்பில், அஜித் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் செய்த சில குளறுபடியால் பிப்ரவரி முதல் வாரம் தள்ளிவைக்க பட்டது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பே விக்னேஷ் சிவன் புதிய படத்தில் கமிட் செய்யப்பட்டு, படத்தின் முழு கதையையும் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டார்.

இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதால், இனி இந்த படத்தில் இருந்து தன்னை தூக்க மாட்டார்கள் என்கிற தேனாவெட்டில், மனைவி நயன்தாரா உடன் ஊர் சுற்றி வந்தார் விக்னேஷ் சிவன், மேலும் நடிகர் அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என சீரியசாக கதையை தயார் செய்வதை விட்டுவிட்டு, மனைவியுடன் செல்ஃபீ எடுத்து அதை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்தார் விக்னேஷ் சிவன்.

படத்தின் படப்பிடிப்பு தொடக்குவதற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், விக்னேஷ் சிவனை நேரில் அழைத்த அஜித், படத்தின் முழு கதையை கேட்டுள்ளார். விக்னேஷ் சிவன் கதையை சொன்னதும் டென்ஷனான அஜித், எட்டு மாதமாக இந்த குப்பை கதையை தான் தயார் செய்து கொண்டிருந்திர்களா.? என முகத்தில் தூக்கி எறிந்தது போன்று பேசிய அஜித், எனக்கு இந்த குப்பை கதையில் நடிக்க உடன்பாடில்லை என நேரடியாகவே அஜித் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்தில் இருந்து வெளியேற்றபட்ட விக்னேஷ் சிவன்,தனக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு கை நழுவி சென்று விட்டது என்கிற பெரும் சோகத்தில் முழ்கியுள்ளார், இந்த சுழலில் விக்னேஷ் சிவனை தொடர்பு கொண்ட முக்கிய சினிமா துறையினர், துக்கம் விசாரித்து போன்று விசாரித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்களாம்.

அதில் இயக்குனர் வெங்கட் பிரபு, இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர், பரவாயில்லை, இதை விட மிக பெரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள், நடிகர் விக்னேஷ் சிவன் தொடர்பு கொண்டு, அஜித் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கவலை பட வேண்டாம், நான் உங்களுக்கு கால் சீட் தருகிறேன் என விக்னேஷ் சிவனுக்கு உறுதி அளித்துள்ளாராம் விஜய் சேதுபதி.