இந்த ஏமாற்று வேலை வேண்டாம்…. வெற்றிமாறன் – விஜய்சேதுபதி உச்சகட்ட மோதல்… என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் விடுதலை. இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிப்பதாக ஆரம்பத்தில் விளம்பரம் செய்யப்பட்டது. விடுதலை படத்திற்காக தன்னுடைய உடலை உடற்பயிற்சி மூலம் கட்டுக்கோப்பாக மாற்றினார் சூரி. மேலும் படப்பிடிப்பு தொடங்கி சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

மறைந்த சந்தன கடத்தல் வீரப்பன் தொடர்புடைய கதை விடுதலை படம் எனக் கூறப்படும் நிலையில், வீரப்பன் தனது வாழ்க்கையில் மறைந்து வாழ்ந்த சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படத்தில் ஆசிரியராக விஜய் சேதுபதி தற்பொழுது நடிக்கும் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் கிஷோர், ஒரு சில காரணத்திற்காக அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை.

கிசோர் பதிலாக இயக்குனர் பாரதிராஜா கமிட்டானார், அவரை வைத்து சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்குள் சில காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த காட்டுப் பகுதியில் கொசு மற்றும் அட்டை பூச்சி தொல்லைகள் காரணமாக இந்த படத்தில் இருந்து விலகினார் இயக்குனர் பாரதிராஜா. இதன் பின்பு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஜனவரி 2021ல் நடிகர் விஜய் சேதுபதி விடுதலை படத்தில் பாரதிராஜா நடிக்க இருந்த கதாபாத்திரத்தின் கமிட்டானார்.

விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகளை எடுத்து வந்த வெற்றிமாறன், தீடிரென கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்து, சூரி நடித்த காட்சியை விட அதிக காட்சிகள் விஜய் சேதுபதியை வைத்து எடுத்தார். இதனால் சூரி நடிக்கும் விடுதலை படமாக தொடக்கப்பட்டும் இடையில் இது விஜய் சேதுபதி படமாக மாறியது. இதனால் நடிகர் சூரிக்கு மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த வெற்றிமாறன், திருப்தி இல்லை என கூறி, விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரிடம் மேலும் கால் சீட் கேட்டு படப்பிடிப்பு நடத்தினார், அவர்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். தற்பொழுது மேலும் தனக்கு திருப்தியில்லை அதனால் மீண்டும் படப்பிடிப்பு நடந்த வேண்டும் என வெற்றிமாறன் தெரிவிக்க. பட்ஜெட்டை தாண்டி பலமடங்கு செல்கிறது என கடுப்பானது தயாரிப்பு நிறுவனம்.

இதற்கு, இந்த படம் இரண்டு பாகமாக வெளியாகிறது. அதனால் இரண்டு படத்திற்கான லாபம் உங்களுக்கு கிடைக்கும் என தயாரிப்பு நிறுவனத்தை சமாதனம் செய்துள்ளார் வெற்றிமாறன். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு மேலும் 30 நாள் கால்ஷீட் கேட்டுள்ளார் வெற்றிமாறன். தன் கைவசம் இருக்கும் படத்தில் நடிப்பதற்கே கால் சீட் கொடுக்க முடியமால் பிசியாக இருக்கிறேன். ஒரு படத்திற்கு எத்தனை முறை கால் சீட் கொடுப்பது என டென்ஷனில் பேசியுள்ளார் விஜய் சேதுபதி.

மேலும், விடுதலை படம் இரண்டு பாகம் என தெரிவித்துள்ளதால், உங்களுக்கு மேலும் 30 நாள் கால்சீட் வேண்டும் என்றால், ஒரு படத்தில் நான் வாங்கும் சம்பளத்தை மேலும் கொடுத்தால் தான், உங்களுக்கு கால் சீட் தருவேன். உங்களால் முடியும் என்றால் சொல்லுங்க…. இல்லை என்றால் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என திட்டவட்டமாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளதால், அடுத்த கட்டத்துக்கு விடுதலை படத்தை நகர்த்த முடியாமல் தவித்து வருகிறார் வெற்றிமாறன் என கூறப்படுகிறது.

ரஜினியை சிக்க வைத்த இரண்டு மகள்கள்…. அன்புச்செழியன் விவகாரத்தில் என்ன நடந்தது தெரியுமா.?